நாமக்கல், மே 27 – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.87.44 லட் சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் செவ்வாயன்று வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 80 பயனா ளிகளுக்கு ரூ.84.94 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற் றும் திருமண நிதியுதவி, 14 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை, 10 பயனாளிகளுக்கு ரூ.55,400/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மாநிலங் களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ் வரன், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், மேயர்.து. கலாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.