districts

img

தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், ஜன.10- தாராபுரம் வட்டம் வடுகபாளை யம் அருகே தனியார் இரும்பு  ஆலைக்கு எதிராக ஏழு கிராமங்க ளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த வடுகபாளையம் பகுதி யில் ஸ்ரீ கௌரி ஸ்டீல்ஸ் என்ற தனி யார் நிறுவனத்தின் இரும்பு உருக்கு ஆலை அமைக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மாதத்திற்கு 10 ஆயிரம் டன் திறனுடன் இந்த ஆலை அமைக் கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதற்கு கடந்த இரண்டு  ஆண்டு காலமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள சங்கராண்டாம்பாளை யம், சூரியநல்லூர், கண்ணாங் கோவில் உள்ளிட்ட ஏழுக்கும் மேற் பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இங்கு இரும்பு ஆலை அமை யும் பட்சத்தில் காற்று மாசுபாடு, நீர்  மாசுபாடு சுற்றுச்சூழல் பாதிப்பு கள் ஏற்படும். இதன் காரணமாக வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மிக கடுமையாக பாதிக் கப்படும். எனவே, இங்கே இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதிக் கக் கூடாது என மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பல  முறை மனு அளித்தனர். மேலும், பல்வேறு கட்டமாக கிராம மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.ஆனால், தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இதனிடையே தனியார்  இரும்பு ஆலை அமைக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்ற  கோரிக்கையை வலியுறுத்தி மேற் படி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்டோர் திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு  காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இந்த போராட்டம் தொடர்பாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தைச் சேர்ந்த மு.ஈசன் கூறுகை யில், இந்த நிறுவனம் மக்கள் அதி கம் வசிக்கும் கிராமப்பகுதியில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலை அமைப்பதற்கு அரசு வழங் கிய அனுமதி ஆவணம், சுற்றுச்சூ ழல் தாக்கம் பற்றிய மாசு கட்டுப் பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி ஆவணம், விவசாய நிலங்களை தரிசு நிலம் என வகைப்படுத்தி வழங்கிய ஆவணங்கள் வேண் டும் என தொடர்ந்து இரண்டாண்டு  காலமாக கோரிக்கை விடுத்தும் ஆலை நிர்வாகமும், சம்பந்தப் பட்ட அரசுத் துறையினரும் இது வரை தரவில்லை. எனவே அந்த ஆவணங்களைத் தரும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு படுவதென முடிவு செய்து ஆட்சி யர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று  தெரிவித்தார்.