districts

img

சேலம்: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய வாக்காளர்கள்

சேலம், பிப்.19- சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களின ஜனநாயகக் கட மையை நிறைவேற்றினர். சேலம் மாவட்டத்தில் மாநகராட்சியில் 60  வார்டுகள், 6 நகராட்சியில் 165 வார்டு, 31 பேரூ ராட்சியில் 474 வார்டுகள் என மொத்தம் 699 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் அறிவிக்கப்பட்டது. இதில் மேச்சேரி பேரூராட்சியில் 2 வார்டுகள், தொடாவூர், கொளத்தூர் பேரூராட்சிகளில் தலா ஒரு  வார்டுகளில் போட்டியின்றி திமுக வேட்பா ளர்கள் வெற்றி பெற்றனர். இதைதவிர்த்து மாவட்டம் முழுவதும் 695 கவுன்சிலர் பத விக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து 206  வேட்பாளர்கள் போட்டியிட் டனர். இதைத்தொடர்ந்து சனியன்று வாக் குப்பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக் கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்திருந்து நிண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி னர்.   முன்னதாக, தேர்தலையொட்டி மாநக ராட்சி பகுதியில் 3 ஆயிரத்து 412 அலுவலர் களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி யில் 3 ஆயிரத்து 916 அலுவலர்களும், 3 ஆயி ரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையின ரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை  வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக நடைபெற்றது.