தருமபுரி, ஏப்15- அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்ட ணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி போட்டியிடு கிறார். இவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, ஆர். மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி, ஏ.ஜெயா, மாதர் சங்க நிர்வாகிகள் பி.கிருஷ்ணவேணி, கே.சுசிலா, எம். மீனாட்சி, மாலா சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். அப் போது, தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணி துவங்கி படித்த இளைஞர்களுக்கு கண்ணியமான வேலை உரு வாக்கப்படும். எரிபொருட்களின் விலை குறைக்கப்படும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந் தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், என்றனர்.