districts

img

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து குளத்தை மீட்க கோரி கிராம மக்கள் மனு

தருமபுரி, மே 17- ஆக்கிரமிப்பாளர்க ளிடமிருந்து குளத்தை  மீட்டுத்தர கோரி குஜ் ஜார அள்ளி கிராமமக் கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சி னியிடம் மனு கொடுத்த னர். அந்த மனுவின் விபரம் பின்வருமாறு, தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு வட்டத்திற்குட்பட்டது குஜ்ஜார அள்ளி. இந்த கிராமத்தில் சர்வே எண் 22 ல் பொது குளம் உள்ளது. இந்த குளம் 200 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது.  இந்த குளத்தின் மூலம் கால்நடைகளுக்கு தண்ணீர் அப்பகு தியில் போர்வெல் பம்புகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள் ளது. குளத்தின் அருகே உள்ள விவசாய கிணறுகளுக்கு நீர்  ஊற்றாகவும் உள்ளது.குளத்தினால் விவசாயிகளும் பயன டைகின்றனர்.பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது  குளத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். குளம் ஆக் கிரமிப்பை அகற்றி குளத்தை பாதுகாக்கவேண்டும் என மனு வில் குறிப்பிட்டுள்ளனர்.

;