districts

img

தமிழக - கேரள வன எல்லையில் தீவிர சோதனை

நீலகிரி, நவ.14- கூடலூர் அருகே தமிழக -கேரள வன எல்லைகளில் உள்ள  சோதனைச் சாவடிகளில் நீலகிரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கேரள எல்லை  அமைந்துள்ளது. இப்பகுதியில், தமிழக – கேரள இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத் துள்ளது. இத்தகவலையடுத்து, எல்லைகளில் உள்ள சோத னைச் சாவடிகளில் கண்காணிப்பை துரிதப்படுத்த உத்தர விடப்பட்டது. அதன் அடிப்படையில், அங்கு மேற்கொள் ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் திங்களன்று ஆய்வு செய்தார். தமிழக - கேரள எல்லையில் உள்ள ஓவேலி, நாடு காணி, சோலாடி, நம்பியார்குண்ணு, பாட்டவயல் உள்ளிட்ட  சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவ டிவேல் தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.