districts

img

மயான பாதையை மீட்டுத்தர வலியுறுத்தல்

அவிநாசி, டிச.29- கருவலூர் அருகே கிருஷ்ணாபுரம் மயான சாலையை மீட்டு தரக்கோரி, கிராமமக்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிரா மத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மயான  பாதையை  100 ஆண்டுகளுக்கு மேலாக மக் கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயானத்திற்கு  அருகில் இருந்த நிலங்களை தனி நபர்கள் சிலர் விலைக்கு  வாங்கி, கம்பிவேலி அமைத்து  பாதையினை மறித்துள்ளனர். இதில் அடைத்து வைத்துள்ள மயான சாலையை மீட்டுத் தர வேண்டும் என அவிநாசி வட் டாட்சியர் அலுவலகத்தில் அப் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  இம்மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட் சியர் ராஜேஷ், நில அளவீடு செய்து உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளு மன்ற தொகுதி நிர்வாகி சண்முகம், திருப்பூர்  வடக்கு சட்டப்பேரவை தொகுதி செயலாளர்  ஏ.பி.ஆர்.மூர்த்தி, பொதுமக்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.