நாமக்கல், ஜூன் 21- மேட்டூர் அணையிலிருந்து உடனடி யாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் ஒன்றியம், வட்டமலையில் அகில இந்தியா விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, பஞ்சாலை சங்க தலைவர் பிரம்மன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். இதைத்தொடர்ந்து கூடக் கல், குப்பனூர், பூலாம்பட்டி, குள்ளப் பம்பட்டி, செட்டிபட்டி, குமாரபாளை யம், எலந்தகுட்டை, பள்ளிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங் கள் உள்ளன. கால்வாய் நீர் பாசனத்தை நம்பி விவசாயிகள் வாழக்கூடிய நிலை உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாத தால் வேளாண் பணியை நம்பி வாழக் கூடிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மேட்டூர் அணையி லிருந்து உடனடியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், சங்கத் தின் புதிய கிளைத் தலைவராக மனோ கரன், செயலாளராக செந்தாமரை, பொருளாளராக இந்திராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.