districts

img

திறக்கப்படாத மாசிலா அருவி: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நாமக்கல், ஜன. 16- கடந்த ஆறு மாதம் ஆகியும் கொல்லிமலை மாசிலா அருவி திறக் கப்படாததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக கொல்லி மலை உள்ளது. கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்  அருவி, மாசிலா அருவி, எட்டிக்கை யம்மன் கோவில், மாசி பெரியண் ணன் சாமி கோவில், அரப்பளீஸ் வரர் கோவில் உள்ளிட்ட ஏராள மான சுற்றுலா தலங்கள் அமைந்துள் ளது.  குறிப்பாக, அரியூர் நாடு பஞ் ., பகுதியில் அமைந்துள்ள மாசிலா அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், அந்த  அருவி வனத்துறையின் கட்டுப்பாட் டில் கொண்டுவரப்பட்டு, அருவி யில் ஆண்கள், பெண்கள் என தனித் தனியாக குளிக்க இட வசதிகள் ஏற்பா டுகள் செய்யப்பட்டன. மேலும், அரு வியின் வளாகத்தில் சிறுவர் பூங்கா, உடை மாற்றும் அறைகள்,  நடைபாதைகள், சுகாதார வசதிகள்  உள்ளிட்ட பல்வேறு அடிப்படை  வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்  சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட் டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், பராமரிப்பு பணிகளை  வனத்துறையினரே மேற்கொள்வ தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படுவதாக குற்றம்சாட்டி அப்பகு தியினர் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னைத்தொடர்ந்து கொல்லிமலை தாசில்தார் அப்பன்ராஜ் தலைமை யில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என அறிவுறுத்தப்பட்டது.  ஆனால், கடந்த 6 மாதங்கள் ஆகி யும் எந்தவொரு முடிவும் எடுக்கப்ப டவில்லை. தொடர்ந்து, மாசிலா அரு வியும் சுற்றுலாப் பயணிகளின் பயன் பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள் ளது. இதனால், விடுமுறை தினங்க ளில் வெளியூர், வெளி மாநிலங்களி லிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள்  மாசிலா அருவிக்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும் பிகின்றனர். மாசிலா அருவி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.