districts

img

இந்திய வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய மோடி அரசு

நாமக்கல், ஏப்.18- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்  பயிற்சி குழு (என்சிஇஆர்டி) வெளி யிட்டுள்ள வரலாற்றுப் பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்  கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும்  நீக்கி உள்ளது.  இந்திய வரலாற்றை  இருட்டடிப்பு செய்து, வரலாற்றை  மாற்றி எழுதும் பாசிச பாஜக ஒன்றிய  அரசின் நடவடிக்கைகளை கண் டித்து இந்திய மாணவர் சங்கம் நாடு  தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டுள்ளது. என்ஆர்சிஇஆர்டி வெளியிட் டுள்ள வரலாற்று பாடநூலில், காந்தி படுகொலைக்கு காரண மான ஆர்எஸ்எஸ் மீது மக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. பலமுறை காந்தியை கொலை செய்ய முயற் சித்தது, காந்தியை கொன்ற கோட்சே பிராமணர் என்பதையும் அவர் இந்துவ பயங்கரவாத பத்தி ரிகையின் ஆசிரியர், குஜராத் கலவரங்கள், அவசர நிலை காலம், மம்லுக்,கில்ஜி,துக்ளக்,லோடி  முகலாயர்கள் ஆகிய முஸ்லிம்  ஆட்சியாளர்களின் வரலாறு, வர்ணாசிரமம் வர்ண வேறு பாடுகள், தீண்டாமை, வர்ணா சிரமத்தின் அடிப்படையில் சூத்தி ரர்களும் பெண்களும் வேதங்கள்  கற்க இயலாது, குஜராத் கலவ ரங்களின் பொழுது பிரதமர் வாஜ்பாய் அன்றைய முதல்வர் மோடியிடம், அரசு நிர்வாகமும் - நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற விமர்சனம் செய்தது,

பனிப் போர் மற்றும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் மேலாதிக்கம், தொழில்புரட்சியும் நகரங்களின் முரண்பாடுகளும், ஜனநாயகமும், பன்முகத்தன்மைகளும் தலித் இயக்கம், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா ஆசாத் என பல வரலாற்று நிகழ்வு களை பாட நூலில் இருந்து நீக்கி யுள்ளது.  ஒன்றிய மோடி அரசின் என்சிஇ ஆர்டி மூலம் இந்திய வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் நடவடிக் கையை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக நாமக்கல், கோவை ஆகிய இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்ட தலைவர் மு.தங்க ராஜ் தலைமை ஏற்றார். இதில்,  மாவட்ட செயலாளர் தே.சரவணன்,  மாநிலக்குழு உறுப்பினர் சே. பவித்ரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமிர்தலட்சுமி உள்ளிட் டோர் பங்கேற்று கண்டன உரை யாற்றினர். இதில், திரளானோர் மாணவர்கள் பங்கேற்றனர்.  கோவை கோவை அரசு கலைக்கல்லூரி  முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, இந்திய மாணவர் சங்க  மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன்  தலைமை ஏற்றார். மாவட்ட செய லாளர் அசாருதீன், மாவட்ட துணைச் செயலாளர் சந்தோஷ்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசாத், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் குமரன், ஹரிஷ் குமார்,  சுமித்ரா உள்ளிட்ட திரளானோர்  பங்கேற்று, ஒன்றிய அரசை  கண்டித்து முழக்கங்களை எழுப் பினர்.