நாமக்கல், ஜூலை 20- மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, கரும்பு விவசாயிகள் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் குற்றஞ்சாட்டியுள் ளார். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவ தும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந் திரன் கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா வில் மோடி தலைமையிலான பாஜக அரசாங் கம், கரும்பு விவசாயிகளுக்கு சமீபத்தில் விலையை அறிவித்துள்ளது. ஒரு டன் 10.25 ரெக்க வரி கரும்புக்கு 3050 ரூபாயும், 9.5 ரெக்கவரி உள்ள கரும்புக்கு 2919 ரூபாயும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு விலையை விட 98 ரூபாய் விலையை தற் போது உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக ஒரு டன் கரும்புக்கு 2750 மோடி அரசு விலையை அறி வித்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து வெறும் 160 ரூபாயை மட்டும் ஒரு டன் கரும்புக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு மோடி அரசு செய்திருக்கிற துரோகம் ஆகும். இதனை நாங்கள் கடுமை யாக கண்டிக்கிறோம். ஒரு டன் கரும்புக்கு 9.5 ரெக்கவரிக்கு ரூ.5000 விலை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி இன்றைய தினம் (வியாழனன்று) நாடு முழுவதும் 11 மாநிலங்களில், அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார் பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் 25 மையங்களில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். தேர் தலின்போது மோடி, “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய வருவாயை இரட்டிப்பாகு வோம். விவசாயிகளுக்காக எங்கள் அரசு உள்ளது” என்றார்.
ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்துகிற, விவசா யிகளை வஞ்சிக்கிற நிலைமை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கரும்பு டன் ஒன் றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு 195 ரூபாயை வழங்குகிறது. அந்த ஊக்கத் தொகை என்பதை மாநில அரசு விலையாக அறிவித்து வழங்க வேண்டும். தனியார் சர்க் கரை ஆலைகள் தரவேண்டிய ரூ.1217 கோடி நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத் தில் உள்ள சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மாநில அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி, அந்த பணத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண் டும், என்றார். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் வன் முறை வெறியாட்டம் கண்டுள்ளது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படு கின்றனர். காட்டுமிராண்டித்தனமான செயல் கள் அங்கே நடக்கிறது. ஆனால், பிரதமர் மோடி அதனை கண்டுகொள்ளவில்லை. அந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி தான் நடக்கிறது. ஒரு அரசு, கலவரம் தொடங் கிய காலத்திலேயே கட்டுப்படுத்த தவறி விட்டது. எதிர்வரும் தேர்தலில் பாஜகவிற்கு மக் கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு டி.ரவீந்திரன் தெரிவித்தார்.