districts

img

மக்கள் நலத்திட்டங்களை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றி வெளிநடப்பு

உடுமலை, பிப். 3- மக்கள் பணிகளுக்கு பாதிப்பு ஏற்ப டுத்தி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத் தும் அதிகாரிகளை கண்டித்து ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி, அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்த சம்பவம் உடும லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் ஒன்றியக்குழு தலைவர் மகா லட்சுமி முருகன் தலைமையில் 3 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத் தில் ஒன்றிய பகுதியில் நடைபெறும் வேலைகளை செயல்படுத்துவது இல் லை என்றும் கூட்டம் நடக்கும் போது துறை அதிகாரிகள் முறையாக கலந்து கொள்ளாத நிலையை கண்டித்து ஒன்றி யக்குழு தலைவர் மற்றும்  உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தார்கள். உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 26  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு என்று தனி யாக நிதி ஒதுக்கி பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கெள்ளபட்டு வரும் நிலை யில்  தற்பொழுது வட்டார வளர்ச்சி அலு வலக்தில் இருக்கும் ஊழியர்கள் மற் றும் அரசு அதிகாரிகள் வளர்ச்சி பணி களை மீது கவனம் செலுத்தாமல் அர சுக்கு அவப்பெயர் எற்படுத்தும் வகை யில் நடத்து கொள்ளகிறார்கள் இதா னல் கடந்த நான்கு ஆண்டுகள் முறை யாக எந்த வேலைகளும் நடக்க வில்லை என்றும் உறுப்பினருக்கு தரவேண்டிய கூட்ட நிதி கடந்த ஒரு ஆண்டுகள் தரப்படவில்லை மேலும் மக்களின் அடிப் படை தேவையான குடிநீர் சாக்கடை குறித்த எந்த கோரிக்கைகளையும் நடை முறைபடுத்துவது இல்லை என்று உறுப் பினர்கள் நடைபெற இருந்த கூட்டத் தில் மக்கள் பணிகளுக்கு பாதிப்பு ஏற்ப டுத்தும் அரசு அதிகாரிகளின் நடவ டிக்கையை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றி கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தெரிவிக்கையில் ஒன்றியப் பகுதியில் நடைபெறும் வேலைகளை முறையாக ஆய்வுகள் செய்வது இல்லை மேலும் வளர்ச்சி பணிகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் தருவது இல்லை. கடந்த ஒரு ஆண்டுகளாக ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தர வேண்டிய கூட்டப்படியை தராமல் உள்ளார்கள் மேலும் எவ்வித வேலை களும் செய்யாமல் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்த பல வகையில் இடையூறு ஏற்ப டுத்தும் அதிகாரிகள் ஒன்றியக்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கண்டித்து கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தில் இருந்து அனைவரும் வெளிநடப்பு செய்து உள்ளோம் என்றார்.