அவிநாசி, ஜூன்.12- திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பியநல்லூர் ஊராட்சி, தாசம்பா ளையம், கந்தம்பாளையம் பகுதிக ளில் இரண்டு புதிய பகுதி நேர நியா யவிலை கடைகளை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச் சர் பதவியேற்று பல்வேறு வாக்கு றுதிகளை நிறைவேற்றியுள்ளார் கள். கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழக மக்களின் துன்பங்களைப் போக்கு வதற்கு வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத் திற்கும் ஆறுதல் அளிக்கும் வகை யில் ரூ.4000 வழங்கி 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதலமைச் சர் வழங்கினார். தேர்தல் அறிக்கை யில் அளித்திருக்கும் வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில் மக் களின் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட் டார்.அந்த வகையில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பியநல்லூர் ஊராட்சி கந்தாம் பாளையம் மற்றும் தாசம்பாளை யம் பகுதிகளில் இரண்டு புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் வட்டாரத்தில் கூட் டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 806152 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு 1120 நியாயவி லைக் கடைகளில், 773 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 347 பகுதி நேர நியாயவிலைக் கடைக ளும் செயல்பட்டு வருகிறது.
இதில், 152 நியாயவிலைக் கடைகள் வாட கைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரு கின்றன. தற்போது 27 நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஓராண்டில் மட்டும் 4 முழு நேர நியா யவிலைக் கடைகளும், 10 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரு கிறது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கம் அமைந்துள்ள அவி நாசி வட்டாரத்தில் 111 நியாயவி லைக் கடை செயல்பட்டு வருகிறது. புதிய கந்தம்பாளையம், தாசம்பா ளையம் பகுதியில் அமைக்கப்பட் டுள்ள பகுதி நேர நியாயவிலைக் கடைகள் வாரத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் செயல்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டல குழுத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் காந்திமதிரமேஷ், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், செம்பியநல்லூர் ஊராட்சித் தலை வர் சுதாவேல்முருகன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சர வணன் நம்பி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.