திருப்பூர், நவ. 18 - விவசாயிகள், விவசாய தொழிலாளர் இயக்கத்தின் மகத் தான தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வீரைய் யன் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஊத்துக்குளி வட்டக்குழு சார்பில் தோழர் ஜி.வீரய்யன் படத்திற்கு அஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஊத்துக்குளி ஆர்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தவிச மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, தலைவர் மணி (எ) சுப்பிரமணியன், அ.இ.வி.தொ.ச. தாலுக்கா தலைவர் ஆர். மணியன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.