districts

img

காலிப் பணியிடங்களை நிரப்பிடுக போக்குவரத்து ஊழியர்கள் பேரணி

சேலம், ஜூலை 27- அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்  பணியிடங்களை நிரப்பிட  வலியுறுத்தி சிஐடியு தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சார்பில்  வியாழனன்று பேரணி நடை பெற்றது. பேரணியை சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் எண்ணற்ற காலிப் பணியிடங்கள் உள்ளது. அவற்றை பூர்த்தி செய்திட வேண்டும். ஓய்வுப் பெற்ற தொழிலாளிக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதியம் முறைப்படுத்தி வழங்க வேண்டும். 2003ஆம் ஆண்டுக்கு பிறகு பணி யில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண் டும். 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை உடனடியாக துவங்கிட வேண்டு மென போக்குவரத்து கழக நிர்வாக இயக்கு நரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக, ஜான்சன் பேட்டை போக்கு வரத்து பணிமனை முன்பு பேரணி துவங்கி  காந்தி ரோடு வழியாக போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி. உதயகுமார், போக்குவரத்து சங்கத்தின்  மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், துணை பொது செயலாளர் செந்தில் குமார், சம்மேளன குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.