districts

img

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 27 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் 15ஆவது  ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வும், காலி பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தி திருப்பூரில்  இடதுசாரி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி னர். திருப்பூர் காங்கேயம் கிராஸ் அரசுப் போக்குவரத்து மண் டல அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில், 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், ஓய்வு  பெற்றோருக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை  முழுமையாக வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதி யின்படி 2003க்கு பின் பணியில் சேர்ந்த அனைத்து தொழிலா ளர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,  காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரிசு  வேலை வழங்க வேண்டும், மின்சார பேருந்துகள் மற்றும் மினி  பேருந்துகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் போன்ற பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இதில் சிஐடியு, ஏஐடியுசி மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப் புகளைச் சேர்ந்தோர் திரளாகக் கலந்து கொண்டனர்.