districts

img

அறிவுசார் மையத்தில் பயிற்சி வகுப்பு

நாமக்கல், பிப்.9- திருச்செங்கோடு அறிவுசார் மையத்தில், தொழில் நெறி காட்டும் வழிமுறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி சார் பில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தில் தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சரவணன் வர வேற்றார். திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்க ளாக மாவட்ட சிறப்பு தனி துணை ஆட்சியர் பிரபாகரன், போட்டித்தேர்வு பயிற்சியாளர் வசந்தன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா உட்பட பலர் கலந்து கொண்ட னர். இந்நிகழ்ச்சியில் போட்டித்தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது என மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக் கப்பட்டது. முடிவில், தூய்மை அலுவலர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.