உடுமலை, ஜூலை 16- திருப்பூர் மாவட்ட நூலக அலுவலராக பொறுப்பேற் றுள்ள வே.மாதேஸ்வரன் உடுமலை பகுதியில் உள்ள நூல கங்களில் ஆய்வு மேற்கொண்டார். உடுமலை கிளை நூலகம் எண் 2 இல் நடைபெற்று வரும் டி. என்.பி.எஸ்.சி தேர்வு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களு டன் கலந்துரையாடல் நடத்தி அவர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும், நூலகத்துறை மூலம் போட்டி தேர்வில் கலந்து உள்ள மாணவர்களுக்கு தேவை யான உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து உடுமலை மற்றும் மடத்துக்குளம் நூலக பணியா ளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்து நூலகர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் வாசகர் களுக்கு தேவையான நூல்களை கொடுத்து உதவ வேண்டும் என கூறினார்.