திருப்பூர், ஜன.9- கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத் தப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகர் முழு வதும் வெறிச்சோடியது. தேவை யின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிக ரிப்பதால் அதனை கட்டுப்படுத்திட அரசு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஞாயிறு முழு ஊர டங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் செல்லா மல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், தென்னம் பாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலை யம், புஷ்பா ரவுண்டானா உள் ளிட்ட பகுதிகளில் காவல் துறை யினர் முகாமிட்டு சாலைத் தடுப்பு கள் அமைத்து, வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பணிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக் குவரத்து, பெட்ரோல் பங்குகள், நாளிதழ்கள் விற்பனை போன் றவை இயங்க அனுமதிக்கப்பட் டுள்ளது. வீடுகளுக்கு நேரடியாக பார்சல் சப்ளை செய்வதற்கு ஒரு சில உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக் கப்பட்டுள்ளது. மருத்துவ தேவை களை தவிர வாகனங்களில் வரு பவர்களை கண்காணித்து காவல் துறையினர் அபராதம் விதித்த னர். தாராபுரம் இதேபோல் தாராபுரத்தில் விடு முறை நாளான ஞாயிற்றுக்கிழமை களில் கூட மிகவும் பரபரப்பாக காணப்படும் சர்ச்ரோடு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்களை மீறி வெளியே வரும் பொதுமக்களை தாராபுரம் காவல் துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். உடுமலை உடுமலை தாலுகாக்குட்பட்ட மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடைகள் மற் றும் போக்குவரத்து செய்யல்ப டாத காரணத்தால் வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.