திருப்பூர், பிப். 10 - திருப்பூர் வெள்ளகோவில் பகுதி யில் உள்ள சர்வாலயம் பராமரிப்பு இல் லத்தில் குழந்தைகள் பராமரிப்பு இல் லங்களில் உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் (டிக் ட்ராஃபி) நடத் தப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக சனியன்று மாவட்ட அள விலான இப்போட்டிகள் நடத்தப்பட் டன. முன்னதாக இந்த நிகழ்வினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா.ரியாஸ் அகமது பாஷா, சர்வாலயம் இல்ல இயக்குனர் காலா மற்றும் இல்ல குழந்தைகள் விளக் கினை ஏற்றி துவக்கி வைத்தனர். இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எறி தல், கோகோ, வாலிபால், இறகுப் பந்து, கேரம், நடனம், நாடகம் மற்றும் செஸ் போன்ற 13க்கும் மேற்பட்ட தட கள மற்றும் இதர விளையாட்டுப் போட் டிகள் நடத்தப்பட்டன. இதில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 குழந்தைகள் பராமரிப்பு நிறு வனங்களை சேர்ந்த 181 சிறுவர்கள் மற் றும் சிறுமிகள் சிறப்பாக பங்கேற் றனர். போட்டிகளில் ஜூனியர், சப் ஜூனி யர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என்ற நான்கு பிரிவுகளில் சிறுவர், சிறுமிகள் போட்டிகளில் பங்கேற்று 250 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றனர். மேலும் அனைத்து போட்டிகளிலும் பங் கேற்று அதிக விருதுகள் பெற்ற குழந் தைகள் பாதுகாப்பு நிறுவனத்திற்கு டிக் டிராபி வழங்கப்பட்டது. குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுசாமி மற்றும் உறுப்பினர்கள் ஜெய சீலன் மற்றும் மல்லீஸ்வரன் மற்றும் இளைஞர் நீதி குழும உறுப்பினர் மல் லிகா ஆகியோர் பங்கேற்று குழந்தைக ளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினர். இப்போட்டிகளை பள்ளி கல்வித் துறையை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கள் மற்றும் மாவட்ட விளையாட்டு பயிற் சியாளர் சந்துரு மாஸ்டர் மற்றும் அவர் களது குழு உறுப்பினர்கள் பாலசிங்கம், மாணிக்கம், ராஜ், திவ்யா மற்றும் மலர் கவியரசி ஆகியோர் குழந்தைகள் உதவி மைய பணியாளர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தனர்.