districts

img

செருப்பு பற்றி சில சங்கதிகள்..! - செல்வகதிரவன்

செருப்புக்கள் சம்பந்தமாக சில பல விசயங்கள் வலம் வருகின்றன.
காந்தியடிகள் மரத்தில் செய்த செருப்புக்களையே பயன்படுத்தி இருக்கின்றார்.
இரண்டு செருப்புக்கள் இந்த நாட்டில் சிம்மாசனம் ஏறி ஆட்சியை  நடத்தி இருக்கின்றன.
பெரியார் பேசிவிட்டு வருகிற வேளையில் விசமிகள் செருப்பை வீசி இருக்கிறார்கள். ‘ஒரு செருப்பை மட்டுமே வீசி இருக்கிறான்… இன்னோர் செருப்பை நாம் கடந்த பிறகு வீசி இருப்பான்… வண்டியைத் திருப்பு.. அந்த செருப்பையும் எடுத்து வந்து விடலாம்… ஒரு செருப்பால் அவனுக்கும் பிரயோசனமில்லை.. நமக்கும் பயனில்லை..’ என்று திரும்பிப் போய் இன்னோர் செருப்பையும் எடுத்து வந்தவர் பெரியார்.
பெரியார் மீது செருப்பை எறிந்த இடத்தில் பெரியாருக்கு சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. செருப்பொன்று வீசினால் சிலை ஒன்று முளைக்கும் என்று இந்த சம்பவம் குறித்து கவிஞர் கருணானந்தம் எழுதினார்.
“காலுக்கு செருப்புமில்லை… கால் வயிற்றுக்கு கூழுமில்லை..” என்று  கவிதை எழுதினார் தோழர் ஜீவா.
“புதுச் செருப்புக் கடிக்கும்” ஜெயகாந்தனின் அற்புதமான சிறுகதைகளில் இதுவும் ஒன்று.
“செருப்புடன் ஒரு பேட்டி” என்கிற தலைப்பில் வானம்பாடி இதழில் கவிஞர் மு. மேத்தா நாட்டு நடப்பை சுவைபடச் சொல்லி இருப்பார்.
மாலை போட்ட அய்யப்ப பக்தர்கள் மலைக்குப் போய் வருகிற வரையில் செருப்பணிய மாட்டார்கள்.
முப்பதுகளில் பெரம்பலூர் பகுதியில் உள்ள ஒரு ஊரில் பெரியார் பேச வருகிற போது செருப்புத் தோரணம் கட்டி தமது வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
1996ஆம் வருடத்தில் ஜெயலலிதா பயன் படுத்தும் செருப்புக் குவியலை 
தொலைக் காட்சியில் ஒளி பரப்பி ஜனங்களை பிரமிக்க வைத்தார்கள்.
கிராமங்களில் ஒடுக்கப்பட்டோர் என்று விளிக்கப்படுவோர், உயர் ஜாதியினர் வாழும் தெருவிற்குள் செருப்பு போட்டு வரக்கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள். மீறுவோரை கட்டி வைத்து அடிக்கும் பழக்கம் இங்கு நடைமுறையில் இருந்திருக்கிறது.
ஜனங்களுக்குள் ஏற்படும் சண்டைகளில் ‘செருப்பால் அடிப்பேன்’ என்று யாராவது கூறி விட்டால் போச்சு… அதன் பின் விளைவுகள் கொலைகளில் முடிவதுண்டு.
இயக்குநர் பார்த்திபன் எடுத்த ‘ஒற்றைச் செருப்பு’ திரைப்படம் ரசிகர்களால் பாராட்டி பேசப்பட்டு தேசிய விருதும் பெற்றுத் தந்தது.
‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
ஆரம்ப முதல் படம் முடியும் வரையில் செருப்ப போடாமல் நடித்திருப்பார். 
திரைப்படத்தின் நடுவில் அதற்குரிய காரணம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.
செருப்பு விலையை ரூ.99.00, ரூ199.50 என்கிற தினுசில் பேட்டா கம்பெனி
யினர் நிர்ணயம் செய்தது வித்யாசமான செயலாகக் கருத்பட்டடடது.
பிரியமானவர்களுக்கு அன்பளிப்பு பொருளாக எதுவானாலும் வாங்கித் தருவார்கள்… ஆனால் செருப்பு மட்டும் வாங்கித் தரக்கூடாது என்பது தமிழகத்தில் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் மரபு ஆகும்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் 
மூத்த மந்திரி ஒருவர் சிறுவனை செருப்பைத் தூக்கச் சொன்னது பத்திரிக்கை செய்திகளில் அடிபட்டதை பலரும் படித்திருப்பார்கள்.
செருப்பை ‘மிதியடி’  ‘நடையான்’ என்கிற பெயர்களில் அழைக்கும் பழக்கம் இன்றளவும கிராமங்களில் உண்டு.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் நிறுவன அலுவலர்கள் செருப்பணிவதை 
கௌரவக் குறைவாகக் கருதுவார்கள். ஆங்கிலேயரால் இறக்குமதி செய்த 
‘ஷூ’ அணியும் வழக்கத்தையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற தனியார் கல்விக் கூடங்களில் மாணவர்கள் ‘ஷூ’ மட்டுமே அணியவேண்டும் என்பது விதி 
ஆகும்.
“செருப்பை வராண்டாவில் கழற்றி விட்டு வருகிற மாதிரி ஆபீஸ் கவலைகளை அங்கயே விட்டுவிட்டு வரவேண்டும்.
“செருப்பை வாசிலில் வைப்பார்கள்… நகைகளை பீரோவில் வைப்பார்கள்…”
இது போன்ற பொன்மொழிகள் பேச்சு வழக்கில் பேசப்படும்.
இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு தலைவர் பொது நிகழ்வில் செருப்பைத் தூக்கி காட்டியுள்ளார். இந்த சங்கதியே சமீப நாட்களில் ஊடகங்களில் உலா வருகின்றன. கருத்தியல் அரசியல் பேச  அவரிடம் சரக்கில்லை… அதனால் வெறுப்பு அரசியலுக்கு வழி வகுக்கிறார். இதனைக்
கண்டு கொள்ளாமல் கடந்து போவதே இந்த பிரகஸபதிக்கு நாம் தெரி
விக்கும் பதிலாகும்.