districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஓடும் பேருந்தில் நகை, பணம் திருட்டு

கோவை, ஜூன் 8–  ஓடும் பேருந்தில் தலைமை ஆசிரியரிடமிருந்து 29 பவுன்  தங்க நகை மற்றும் ரூ80ஆயிரம் பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் தாரபுரம் அருகே உள்ள கோகுலம்  காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மாலர் விழி (52). இவர் தாரபுரத்தில் உள்ள பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக வேலைபார்த்து வருகிறார்.    இவருடைய கணவர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். அவரை அருகில்  இருந்து கவனித்துக்கொள்ள மலர்விழி வீட்டிலிருந்து கோவைக்கு புறப்பட்டார். அப்போது  வீட்டில் இருந்த 29.5 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் பணம் ஆகியவற்றை ஒரு கைப்பையில் எடுத்துக் கொண்டு தாரப்புரத்தில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில் ஏறி னார். இவரது இருக்கையின் அருகில் 3 பெண்கள் அமர்ந்திருந் தனர். அவர்கள் தலைமை ஆசிரியையிடம் கவனத்தை திருப்பி அவர் கைப்பையில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடி தப்பிச்சென்றனர். பேருந்து திருச்சி சாலை  வந்தபோது கைப்பை மாயமானதை கண்டு மலர்விழி அதிர்ச்சி யடைந்தார். அவரது அருகில் இருந்த 3 பெண்களும் இறங் கிச்சென்றிருந்தனர்.   இதுகுறித்து தலைமை ஆசிரியை மலர்விழி ரேஸ் கோர்ஸ் காவல்துறையினரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற 3 பெண்களை தேடி வரு கின்றனர்.

ஊதிய உயர்வு கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

உதகை, ஜூலை 8- ஜெகதாள பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்கள், ஊதிய உயர்வு கேட்டு திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா பேரூ ராட்சி உள்ளது. இதில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு களில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேருராட்சியில் 32  தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலை யில், அவர்களுக்கு தினசரி 400 ரூபாய் சம்பளம் வழங்கப்பட் டது. இந்நிலையில், தற்போது உள்ள நிலையில் பேரூராட்சி  நிர்வாகம் வழங்கும் ஊதியமும், குறைவாக உள்ளது, பணி யும் அதிகமாக உள்ளது. ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும், ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்ய  கூடாது என வலியுறுத்தி பேரூராட்சி தற்காலிக தூய்மை பணி யாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் தற்காலிக தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். இதில், 60 ரூபாய் தினசரி சம்பளத் தில் கூட்டப்பட்டு 460 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். இப்போராட்டத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

ஈரோடு, ஜுலை 8- வேலை வாய்ப்பற்ற இளை ஞர்கள் உதவித்தொகை பெற விண் ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.   அதன்படி மாதம் ஒன்றுக்கு  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித் தவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் வழங்கப்பட்டு வருகிறது.   உதவித் தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்ப படிவங்களை https://tnvelaivaaippu.gov.in or www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியும் பெற்றுக் கொள்ளலாம். முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் 30.08.2022-குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

ஈரோடு, ஜூன் 8- பவானிசாகர் ஆணை யின் முக்கிய நீர் பிடிப்பு பகு தியான தெங்குமரஹடா, அல்லிமாயார், உதகை, குந்தா, பில்லூர் அணைப்ப குதிகளில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து  வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிக ரித்து வருகிறது. கடந்த 2  நாட்களில் மட்டும் அணை யின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி யன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 85.27 அடியாக இருந் தது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,750 கன அடி யாக இருந்தது. அணையில் இருந்து மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரவில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்

உதகை, ஜூலை 8- கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக் குள் இரவில் உலா வரும் கரடியால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின்  நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகி றது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகு தியிலிருந்து வெளியேரும் கரடிகள், அவ்வப் போது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடி யிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.  இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள இருப்புக்கல் கிராமத்தில் இரவு நேரத்தில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. அவ் வழியாகச் சென்ற வாகனத்துக்கு வழிவிடா மல் சாலையிலேயே சுமார் 200 மீட்டர் தொலை விற்கு ஓடிச்சென்று அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இத னால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளதுடன், இரவு நேரங்களில்  கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவ தைத் தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த  கிராமத்திற்கு அருகில் கரடி ஒன்று பெண்ணை தாக்கி பலியான சம்பவம் நிகழ்ந் துள்ளது. தற்போது மீண்டும் அதே பகுதியில்  கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்  அடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுபோதையில் பள்ளி மாணவர்களை தாக்கிய இருவர் கைது

கோவை, ஜூலை 8-  காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பள்ளி  மாணவர்களை தாக்கி இருவரை போலீசார் கைது செய்தனர்.       கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் வியா ழனன்று பள்ளி முடிந்து காந்திபுரம் பேருந்து  நிலையம் வந்த னர். அவர்கள் கணபதி பேருந்தில் ஏறியபோது அங்கு இரண்டு  பேர் குடிபோதையில் இருந்தனர். இதனிடையே மதுபோதை யில் இருந்த வாலிபர்கள் பள்ளி மாணவர்களுடன்   தகராறில் ஈடுபட்டு, அவர்களை பேருந்தில் இருந்து கீழே இறங்கக் கூறி  அடித்துள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்தனர். தொடர்ந்து போதையில் பள்ளி மாணவர்களை  தாக்கிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற னர். விசாரணையில் அவர்கள் கணபதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28). டிரைவர்.  டாட்டு போடும் வேலை செய்யும்  வருண்மேனன் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இரு வர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர், மகன்  வீடுகளில் அதிகாரிகள் சோதனை

கோவை, ஜூலை 8- அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வெள்ளியன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்த வர் காமராஜ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து  சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் காமராஜின் வீடு உட்பட அவருக்கு தொடர் புடைய 49 இடங்களில் வெள்ளியன்று சோதனையில் ஈடுபட்ட னர். திருவாரூர், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காம ராஜூக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டா வது மகன் இன்பன் மருத்துவர். இவர் கோவையில் சிங்கா நல்லூர் உள்ள ராயல் ஸ்கைலைன் அடுக்குமாடி குடியி ருப்பில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளார். அந்த வீட் டில் தங்கியிருந்து ஒரு தனியார் மருத்துவமனையில் பணி யாற்றி வருகிறார். அவரது வீட்டிலும் 8 பேர் கொண்ட லஞ்ச  ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3  மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது.

நீலகிரியில் கனமழை: 23 நிவாரண முகாம்கள் அமைப்பு

உதகை, ஜூலை 8- நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக குடியி ருப்பு பகுதிகளை வெள்ள சூழந்துள்ளது. கூடலூரில் மட்டும் 23 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கூடலூர், தேவாலா, சேரம்பாடி மற்றும் பந்தலூரில் பெய்த மழையால் பாண்டியாறு, புண்ணம் புழா மற்றும் மாயார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் அதன் நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. பல் வேறு இடங்களில் நீரோடைகள் தூர்வாராப்படாததால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். ஓவேலி பேரூராட்சி, ஆத்தூர் பகுதியில் பலத்த மழைக்கு தோட்ட தொழிலா ளர்களின் 12 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும், தொடர் மழை யால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்  தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை யில் கூடலூரில் நடைபெற்றது. இதன்பின் அமைச்சர் கா.ராமச் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடலூர் பகுதி யில் 23 பகுதிகள் பாதிப்புள்ள பகுதிகளாக கண்டறியப்பட் டுள்ளன. பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை தங்க வைக்க 23 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி, மின்வசதி, கழிப் பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் விற்பனை - ஒருவர் கைது

கோவை, ஜூலை 8- கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர் களை குறிவைத்து போதை மாத்திரை பொடியை விற்பனை செய்து வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்த னர். கோவை மாநகரில்  இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாண வர்களிடையே போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக் கம் அதிகரித்து வருகிறது. போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி விற்பனை செய்யும் கும்பலை காவல் துறையினர் கண்காணித்து, அவர்களை கைது செய்து வரு கின்றனர். கோவை மாநகரில் மட்டும் இதுவரை போதை  மாத்திரைகள் விற்பனை செய்ததாக 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவில்மேடு மதுபானக்கடை அருகே  உள்ள காலி இடத்தில் சிலர் போதை மாத்திரை பொடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையின ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாய்பாபா காலனி காவல் நிலைய ஆய்வாளர் ரெஜினா தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு போதை  மாத்திரை பொடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து  கொண்டிருந்த இடையர்பாளையம் அருகே உள்ள பாரி நகரை சேர்ந்த சரவணகுமார் (28) என்பவரை கைது செய்த னர். மேலும், அவரிடமிருந்து 250 கிராம் போதை மாத்திரை  பொடியை பறிமுதல் செய்தனர். இந்த போதை மாத்திரை பொடிகள் வலி நிவாரணிக்கு பயன்படுத்துவது என்பது தெரிய வந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், சரவண குமார் உணவு பார்சல் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்துக்கொண்டு போதை மாத்திரை பொடிகளை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் போதை மாத்திரை பொடிகள் எங்கிருந்து கிடைத்தது? இதற்கு யாரெல்லாம் பின்னணியாக இருந்து செயல்படுகிறார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் கோவையில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பல்கள் குறித்து பல்வேறு  தகவல்களை போலீசாரிடம் அளித்தார். அதனை வைத்து காவல் துறையினர் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாண வர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் தட்டி கேட்ட அண்ணன் மீது தாக்குதல்

கோவை, ஜூலை 8- பொள்ளாச்சி அருகே தங்கையிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை தட்டி கேட்ட அண்ணன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி எரிப்பட்டி மேற்கு வீதி யைச் சேர்ந்தவர் ஜெயன் (28). இவரது தங்கை சந்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 2 குழந்தை கள் உள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (24)  என்பவர் சந்தனாவின் வீட்டுக்கு சென்று, அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்ட ஜெயன் அங்கு  வந்து வெற்றிவேலிடம், எதற்காக சத்தம் போட்டு கொண்டு  இருக்கிறாய், இங்கு இருந்து போய்விடு, என்று கூறியுள் ளார். அப்போது வெற்றிவேல், ஜெயனை தகாத வார்த்தை களால் திட்டி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினார்.  இதுகுறித்து ஜெயன் நெகமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காடுகளின் பரப்பளவு 33 சதவிகிதம் உயர்த்தப்படும் - வனத்துறை அமைச்சர்

உதகை, ஜூலை 8- தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு 33  சதவிகிதம் உயர்த்துவதே அரசின் நோக்கம் என தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல விரிவாக்கம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தை அணுகுவது குறித்து அனைத்து கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், கூடலூர் பகுதியில் உள்ள பிரிவு-17 நிலப்பிரச்னையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிலத்தில் குடியிருக்கும் சுமார் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமண்டல விரிவாக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காடு களின் பரப்பளவை 33 சதவிகிதம் உயர்த்து வதே அரசின் இலக்காகும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் திமுக நகரச் செயலாளர் இளஞ்செழியன், மார்க்சிஸ்ட் கட் சியின் செயலாளர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகமது கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலா ளர் சகாதேவன், முஸ்லீம் லீக் மாவட்ட செய லாளர் அனீபா, காங்கிரஸ் சார்பில் அம்சா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

மின் பயனர் குறைதீர் முகாம்

ஈரோடு, ஜுலை 8- ஈரோடு மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறி யாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந் திர குறை தீர்க்கும் நாள் கூட் டம் ஜூலை 13 ஆம் தேதி காலை 11  மணிக்கு நடை பெற உள்ளது. செயற்பொறி யாளர்/விநியோகம்/ தெற்கு/ஈரோடு கோட்ட அலு வலகத்தில் (948 EVN ரோடு,  ஈரோடு-9) இடத்தில் நடை பெறும் இக்கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களின் குறை களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று குடும்ப அட்டை சிறப்பு குறை தீர் முகாம்

திருப்பூர், ஜூலை 8 – திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு,  மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரு வது உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடை பெறுகிறது. தாராபுரம் வட்டத்திற்கு தாராபுரம் வட்டாட்சியர் அலுவல கத்திலும், அவிநாசி வட்டம் சேவூர், காங்கயம் வட்டம் வெள்ள கோவில், மடத்துக்குளம் வட்டம் பாப்பாங்குளம், பல்லடம்  வட்டம் பொங்கலூர், திருப்பூர் வடக்கு வட்டம் செட்டிபாளை யம், தெற்கு வட்டம் விஜயாபுரம், உடுமலை பெரியவாள வாடி, ஊத்துக்குளி வடமுகம் காங்கேயம்பாளையம் ஆகிய  இடங்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை  முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரக செய்திக்கு றிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. கைரேகை பதிவு முகாம் அதேபோல் இம்மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 10  மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் பதிவில் கைரேகை  புதுப்பித்தல் முகாம் நடத்தப்படுகிறது. அவிநாசி, தாராபுரம்  காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு,  தெற்கு, உடுமலை, ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகங் கள் மற்றும் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம், வெள்ள கோவில், பல்லடம், உடுமலை நகராட்சி அலுவலகங்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி அலுவலகம், நல் லூர் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் கைரேகை பதிவு முகாம் நடைபெறுகிறது.

போக்குவரத்து, போதை தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருப்பூர், ஜூலை 8 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு  நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு  போக்குவரத்து காவல் துறையும் இணைந்து பழைய பேருந்து  நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33ஆவது சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற் றார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ்  சிறப்புரை ஆற்றினார். சாலை போக்குவரத்து விழிப்புணர்வு குறித்தும், போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில்  கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். தெற்கு காவல்  குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் பங்கேற்றார். மாணவ  செயலர்கள் ரத்தினகணேஷ்,  அருள்குமார்,  பாலசுப்பிரமணி யன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடன மும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றி னர். மாணவ மாணவிகள், பொதுமக்கள், காவல் துறையினர்  இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்விற்கு  கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்கை

திருப்பூர், ஜூலை 8 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் காலி ஆசிரியர்  பணியிடங்களை நிரப்பவும், முதுகலை பட்டங்களில் கூடுதல்  பிரிவுகள் தொடங்கவும் கோரி இந்திய மாணவர் சங்கத்தின்  சிக்கண்ணா அரசு கல்லூரி கிளை சார்பாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் வெள்ளியன்று மனு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்டத் துணைத் தலைவர் கல்கி ராஜ், துணை செய லாளர் ரேவந்த் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீஹரி, கிளை செயலாளர் சபரி மற்றும் கிளை தலைவர் உதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீட்டுக் குடிநீர் இணைப்பு:  ஊராட்சித் தலைவர்கள் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 8 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் மற்றும் மங்கலம் ஊராட் சியில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் வீட்டு குடிநீர்  இணைப்பு வழங்க அனுமதி தருமாறு மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத்தை இரண்டு ஊராட்சிமன்றத் தலைவர்கள் நேரில் சந் தித்து கோரிக்கை விடுத்தனர். இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் க.கணேசன், மங்க லம் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம்  ஊராட்சித் துணைத் தலைவர் தாகா நாசிர் உள்ளிட்டோர் வியா ழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனு வைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் க.கணே சன், இடுவாய் ஊராட்சியில் செயல்பட்டுவரும் அரசுக்குச் சொந்தமான மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராம சபைகளில் நடைபெற்ற தீர்மானம் இன்னும் செயல்படுத்தப் படாமல் இருப்பதை குறிப்பிட்டும், பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்ததையும் குறிப்பிட்டு உடனடியாக  மதுபானக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வலி யுறுத்தினார். அத்துடன் கடந்த ஜனவரி 17 அன்று தாராபுரம் அருகே  அமராவதி ஆற்றில் மூழ்கி மரணம் அடைந்த இடுவாய் அண் ணாமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் குடும்பதிற்கு முதலமைச்சர் நிவாரண நிதியை உடனடியாக  வழங்க ஆவண செய்யவும் கேட்டுக் கொண்டார்.

47 செல்போன்கள் மீட்பு

திருப்பூர், ஜூலை 8 – திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 47 செல்போன்களை திரு டர்களிடம் இருந்து மீட்டு  உரியவர்களிடம் ஒப்படைத் ததாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.  கடந்த ஆறு மாத காலத் தில் இம்மாவட்டத்தில் காணாமல் போனது மற்றும் திருடப்பட்டது தொடர்பாக புகார்தாரர்கள் கொடுத்த மனுவின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மீட் கப்பட்ட செல்போன்கள் வெள்ளிக்கிழமை சம்பந்தப் பட்டவர்களிடம் ஒப்படைக் கப்பட்டது.