திருப்பூர், பிப். 18 - திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி களில் சாமானிய ஏழை, எளிய, நடுத்தர, உழைப்பாளி மக்களின் குரல் ஒலிக்கவும், மக்கள் நலன் காக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. திருப்பூர் மாவட்டத் தில், திருப்பூர் மாநகராட்சியில் 8 வார்டுகள், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 5 வார்டு கள் மற்றும் உடுமலை, தாராபுரம், வெள்ள கோவில், பல்லடம் நகராட்சிகளில் தலா 1 வார்டு வீதமும், அவிநாசி, ஊத்துக்குளி, குன் னத்தூர், கொளத்துப்பாளையம், சின்னக் காம் பாளையம் ஆகிய பேரூராட்சிகளில் 6 வார்டுகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 40 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் காண்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உழைப்பாளி மக் களின் நலன் காக்க தொடர்ந்து பாடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூ ராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக் கப்படும்போது, பின்வரும் பணிகளை நிறை வேற்றப் பாடுபடுவோம் என்பதை உறுதி யுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பூர் மாநகராட்சி
மாநகரின் இணைக்கப்பட்ட பகுதிகள் உள்பட அனைத்து குடியிருப்புகளிலும், மக்க ளுக்கு இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கவும், நான்காவது குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மாநகரில் விடுபட்ட பகுதி களை பாதாளச் சாக்கடை திட்டத்தில் முழுமை யாக இணைத்து முறையான கழிவுநீர் வெளி யேற்ற நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்து வோம். மாநகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் எண் ணிக்கை நிரப்பப்படாமல் உள்ளது. 3000 தூய் மைப் பணியாளர்கள் மாநகராட்சி மூலம் நேரடியாக பணியமர்த்திட வலியுறுத்து வோம். தூய்மைப் பணியை தனியார்மயம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செயல் படுத்துவதை கைவிட்டு, அனைத்து தூய் மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மாநகரில் விரிவாக்கப் பகுதிகள் உள்பட அனைத்து குடியிருப்புகளி லும் வீதி விளக்குகள் முழுமையாக அமைத் திடவும், தனியார் மூலம் பராமரிப்பு பணி என்ற தோல்வி அடைந்த திட்டத்தை கைவிட்டு, நேரடியாக மாநகராட்சி மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் வற்புறுத்துவோம். அனைத்து குடியிருப்புகள், நகரின் பிர தான சாலைகள் என குண்டும், குழியுமாக உள்ள அனைத்து சாலைகளையும் சீர மைத்து புதிதாக தார்ச்சாலை அமைக்கவும், தேவையான பகுதிகளில் காங்கிரீட் சாலை கள் தரமான முறையில் அமைக்கவும் வலி யுறுத்துவோம். நகரில் குடியிருப்பு பகுதி குப்பையையும், தொழிற்சாலை குப்பையை யும் தனியாகப் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல் படுத்தவும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அறிவியல் அறிஞர்கள், வல்லுநர்களை கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வும் மாநகராட்சியில் குரல் கொடுப்போம். சொத்து வரி விதிப்பு, குடிநீர் கட்டணம் ஆகியவற்றில் சாமானிய, ஏழை, எளிய, நடுத் தர மக்களை பாதிக்காத வகையில் நிதியா தாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கவும், மனைப் பிரிவு அங்கீகாரம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றுக்கு அபரிமித கட்ட ணம் வசூலிப்பதை மாற்றி நியாயமான கட் டணம் நிர்ணயிக்க வலியுறுத்துவோம். குடிநீர் குழாய் இணைப்பு, சொத்து வரி நிர்ணயம் உள்ளிட்ட மாநகராட்சி பணிகளில் ஊழல் நடவடிக்கைகளை களைந்து, தகுதி உள்ள அனைவருக்கும் உரிய சேவை நியாய மான கட்டணத்தில் கிடைப்பதை உத்தர வாதம் செய்வோம்.
மருத்துவம்
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தாய் சேய் நல விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங்களில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கவும், போதுமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு உரிய உயிர் காக்கும் முக்கிய மருந்துகள் மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய் களுக்கு உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைத்து தடையின்றி வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி
மாநகராட்சி கல்வி நிதியை முழுமை யாக கல்வி நிறுவனங்களுக்கு செலவிடு வதை உத்தரவாதம் செய்வோம். அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். சுத்த மான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி அதற்கான நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் நியமனம் மற்றும் இரவுக் காவலர், சுற்றுச் சுவர், வகுப்பறைகளுக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் முழுமையாக ஏற்பாடு செய்யவும், மாணவியர் பள்ளிகளில் தானி யங்கி நாப்கின் வழங்குவது, பயன்படுத்தப் பட்ட நாப்கின்களை எரியூட்டும் மின்சாதனம் முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு மைதானங் களை வேறு பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்வதை தடை செய்து, தேவையான விளையாட்டு உபகரணங்கள், கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.
குடிசை பகுதி மேம்பாடு
மாநகரில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும் குடிநீர், சாலை, சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் முழுமையாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உழைக்கும் மக் கள் பல லட்சம் பேர் வாழும் இந்த மாநகரில் அவர்களுக்கு போதிய பொழுது போக்கு வசதி இல்லை. எனவே ஏற்கெனவே இருக் கும் பூங்காக்களை மேம்படுத்தவும், அனைத்து வார்டுகளிலும், குடியிருப்புகளி லும் ரிசர்வ் சைட்டுகள் ஆக்கிரமிப்பில் இருந்தால் முழுமையாக அகற்றவும், பூங்கா, விளையாட்டு மற்றும் நடைபயிற்சி மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை, எளிய குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சி கள் நடத்துவதற்கு வசதியாக, நான்கு மண்டலங்களிலும் அனைத்து வசதிகளுடன் திருமண மண்டபங்கள் கட்டப்படும். மாநகரில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களி லும் பயணிகள் மற்றும் பயனாளிகளுக்கு உரிய குடிநீர், கழிப்பிடம், நிழற்குடை, இருக் கைகள், பேருந்துகள் கால அட்டவணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுகாதார மான பராமரிப்பு செய்யப்படும்.
தனி மிதிவண்டி பாதை
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்து உலகளாவிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மாநகரில் முக்கிய பாதை களில் தனி மிதிவண்டி (சைக்கிள்) பாதைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீர்மிகு நகரத் திட்டத்தில் இது குறித்து குறிப்பிடப் பட்டிருந்தாலும் இதுவரை செயல்படுத்த நட வடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம். டவுன்ஹால் மைதானத்தில், வாகன நிறுத் தமும், கூட்ட அரங்கமும் கட்டப்பட்டாலும், கலை, இலக்கிய, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்துக் கும் ஒரு கலையரங்கம் மற்றும் கருத்தரங்க கூடம் ஏற்படுத்த வலியுறுத்துவோம்.
இலவச வை-பை வசதி
பேருந்து நிலையங்கள், ரயில் நிலை யங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக் கள் அதிகம் கூடும் பகுதிகளில் இலவச வை-பை தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்த வும், நகரில் உழைக்கும் மக்களுக்கு வீட்டு வசதி பெரும் பிரச்சனையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீர் நிலைகள், நீர் வழித் தடங்களுக்கு பாதிப்பில்லாத அரசு புறம் போக்கு இடங்களில் ஏற்கெனவே பல ஆண்டு களாக குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், சமூகரீதியாக நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்புகளை மேம்படுத்தி, சிறப்பு கவனம் செலுத்தி, தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி கள் செய்து தர வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைக் கேற்ப அமைத்து தர வேண்டும், உழைக்கும் பெண்கள் விடுதிகள் மற்றும் இளைஞர் களுக்கு டார்மெட்ரி எனப்படும் தங்குமிட வசதி கள் ஏற்படுத்தப்படும்.
அறிவியல் கோளரங்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி குமரன் நினைவகம் மாணவர்கள், இளை ஞர்களுக்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ப புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்படும். இந்நகரின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது பணிகள் பற்றிய வரலாற்று கண்காட்சி ஏற் படுத்தப்படும். குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் விதத் தில் அறிவியல் பூங்கா, கோளரங்கம் ஆகி யவை அமைத்திட வலியுறுத்துவோம். நகரை அழகுபடுத்தும் திட்டம் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு என்றும் சாலை யோர, வீதியோர வியாபாரிகளை அப்புறப் படுத்துவதை ஏற்க முடியாது. சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மத்திய சட்டப்படி அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து, போக்குவரத்துக்கும், மக்களுக்கும் பாதிப் பில்லாமல், அதே சமயம் அவர்கள் வாழ் வாதாரத்தை உறுதிப்படுத்தக் கூடிய முறை யில் நடைபாதை கடைகள் அமைத்துத் தர நட வடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பிரிவின ரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன்னு ரிமை அளிக்கப்படும்.
நொய்யல் நதி பாதுகாப்பு
நாகரீகத்தின் தொட்டில்கள் எனப்படும் நதிக்கரைகள் இன்றைய வாழ்க்கை முறை காரணமாக தற்போது திறந்தவெளி சாக்கடை களாக, குப்பைத் தொட்டிகளாக மாற்றப்பட் டுள்ளன. திருப்பூருக்கு அழகு சேர்க்கும் நொய்யல் நதியில் கழிவுகள், குப்பைகள் கொட்டாமல் தடுத்து புத்துயிர் ஊட்ட தன் னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்க ளையும் இணைத்துக் கொண்டு உரிய நடவ டிக்கைகள் எடுக்கப்படும்.
நகராட்சி, பேரூராட்சிகளில்
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்க ளுக்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வலியுறுத்துவோம். நகரம், பேரூராட்சிகளில் தினமும் முறையாக குப்பைகளை அகற்றிடவும், தேவையான தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவும் வலியுறுத்துவோம். கழிவுநீர், சாக்கடை வடி கால் வசதி அனைத்துப் பகுதிகளிலும் ஏற் படுத்தவும், முறையாக பராமரிக்கவும் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அனைத்து சாலைகள், வீதிகளிலும் தெரு விளக்கு அமைக் கவும், முறையாக பராமரிக்கவும் வலியுறுத்து வோம். சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை சாமா னிய, ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகை யில் நியாயமான முறையில் நிர்ணயிக்க வலி யுறுத்துவோம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவர் கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் கள் நியமிக்கவும், போதுமான மருந்துகள் கையிருப்பு வைத்து அனைத்து நாட்கள் இயங்குவதை உறுதிப்படுத்த வலியுறுத்து வோம். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், வகுப்பறை கட்டமைப்பு வசதி, சுத்தமான குடி நீர், சுகாதாரமான கழிப்பிட வசதி, சுற்றுச் சுவர் அமைக்கவும் வலியுறுத்துவோம். அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களிலும் அடிப்படை சேவைகள் லஞ்ச, ஊழல் இல்லா மல் மக்களுக்கு கிடைத்திட முயற்சி செய் வோம். எனவே இந்த மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற நகராட்சி களில் 40 வார்டுகளில் போட்டியிடக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் களை மக்கள் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். எப்போதும் வீதி களில் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டி ருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளாட்சி அமைப் புகளில் இடம் பெறும்போது மக்களின் கோரிக் கைகளை நிறைவேற்றவும், மக்களுக்கு எதி ரான பிரச்சனைகளில் மக்களின் மனசாட்சி யாக செயல்படவும், அதன் மூலம் மக்கள் நலன் காக்கவும் உறுதியுடன் செயல்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.