districts

img

சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திட தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தருமபுரி, மே 27 – சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்திட வலியுறுத்தி செவ்வாயன்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை முழுக்க போராட்டத்தில் ஈடுபட்ட னர். கல்வி, வேலை வாய்ப்பில்  இட ஒதுக்கீடு என்பது ஓபிசி, பட்டி யல் சாதி, பழங்குடியினருக்கு வாசல்களை திறந்து விட்டன. சமூக  ஒடுக்குமுறைக்கெதிரான எழுச்சி  பெறவும் அது உதவியது. சாதிவா ரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட வேண்டும் என இடது சாரி  கட்சிகள் உள்ளிட்ட சமூக இயக்கங் கள் போராடி வருகிறது. தொடர்  அழுத்தம் காரணமாக, சாதிவாரிக்  கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள் ளது. ஆனால், நடப்பு பட்ஜெட் டில் மக்கள் தொகை கணக்கெடுப் புக்கு நிதி ஒதுக்கவில்லை. சாதிவா ரிக் கணக்கெடுப்பில் என்னென்ன தரவுகள் திரட்டப்படும், எப்பொ ழுது துவங்கும் எப்பொழுது முடி யும் என்று அறிவிக்கவில்லை. மேலும், 1990-களுக்கு பின்னர் உலக மயக் கொள்கைகள் அரசுத் துறைகளையும், பொதுத்துறை நிறுவனங்களையும் ஆட்குறைப்பு,  அவுட்சோர்சிங், தனியார் மயமாக் கல், தனியார் கூட்டு என சிதைத்தன.  இதனால் இங்கு இட ஒதுக்கீடு காவு  வாங்கப்பட்டது. மறு புறத்தில் பன்னாட்டு நிறுவனங்களும், தனி யார் நிறுவனங்களும் அரசின்  கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைக ளால் பலமடைந்துள்ளன.  அரசாங்கத்திடம் நிலம், செல் வக் குவிப்பிற்கான ஏற்பாடு, வரிச் சலுகை அனுபவித்து தொழில் நடத் துகிற, லாபம் கொழிக்கிற தனியார்  நிறுவனங்களிடம் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே, சாதி வாரிக் கணக்கெடுப்பை கால நிர்ண யம் செய்து விரைந்து நடத்த வேண் டும். தனியார் துறையில் அமல் படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை முழுக்க போராட்டத் திற்கு மாவட்ட தலைவர் பி. ஜெயரா மன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சணயா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினார். இதில், தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், மாவட்டப் பொருளாளர், கே.கோவிந்தசாமி, தவிச மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர்  கே. என்.மல்லையன், மாதர் சங்க  மாவட்டத் தலைவர் ஏ. ஜெயா உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னாள் மாநில  துணைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டெல்லி பாபு, சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச் சாமி உள்ளிட்டோர் உரையாற்றி னர். முடிவில், சிபிஎம் தங்கமணி நன்றி கூறினார். இதில், திரளா னோர் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அரு கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தலித் விடுதலை கட்சியின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி. ஜோதிமணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.லலிதா, அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.சண் முகவள்ளி மற்றும் ஈரோடு நகர கமிட்டி செயலாளர் வி.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பேசினர். திரளா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.