districts

img

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்த ஒன்றிய பட்ஜெட்

பென்னாகரம், பிப். 3- மாற்றுத்திறனாளிகளை புறக் கணித்துள்ள ஒன்றிய அரசின் பட் ஜெட்டை கண்டித்து அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு மாற்றுத்திற னாளிகள் உரிமை சட்டத்தை அமல் படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 240.39 கோடியில் இருந்து 150 கோடியாக நிதியை குறைத்துள் ளது. ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை ரூ300 மட்டுமே வழங்கி வருகிறது. அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப் பட்டு வருகிறது.

இதுகுறித்து பட் ஜெட்டில் எதுவும் சொல்லப்பட வில்லை. கிராமப்புற மாற்றுத்திறனா ளிகள் பயன் பெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்திற்கு 30 சதவிகிதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்பு உரி மைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் பென்னாகரம் பகுதி செயலாளர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் கே.ஜி.கரூ ரான், மாவட்டத் துணைத் தலைவர் மாரியப்பன், பென்னாகரம் பகுதி தலைவர் சக்திவேல், சின்னப்பள்ளி பகுதி செயலாளர் சின்னமாது, தரும புரி பகுதி குழு செயலாளர் சுசீலா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஆ.ஜீவானந் தம் உள்ளிட்ட திரளனோர் பங்கேற் றனர்.  ஈரோடு இதே கோரிக்கைகளை வலியு றுத்தி ஈரோடு, அந்தியூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடு அனைத்துத்துறை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் தாலுகா  செயலாளர் முருகன் தலைமையில்  இப்போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.