districts

img

ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவி

திருப்பூர், மே 5- திருப்பூரில் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவமனையில் இருந்த மாணவி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் தேர்வு  எழுதும் மையத்துக்கு வந்து பிளஸ் டூ தேர்வு  எழுதினார்.  திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகு தியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கீதா. இவர்களது மகள் ரிதன்யா. இவர் திருப்பூர் கணபதிபாளையம் அரசு  மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரி சோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை யடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் னர் நுண் துளை அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற் றிகரமாக முடிக்கப்பட்டு மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந் தனர்.  இதனிடையே வியாழனன்று பிளஸ் டூ  பொதுத்தேர்வு நடைபெறும் சூழலில் மருத் துவமனையில் இருந்த ரிதன்யா, தானும் தேர்வு எழுத வேண்டும் என பெற்றோரிட மும், மருத்துவரிடமும் தெரிவித்துள்ளார். மாணவியின் எதிர்கால நலனை கருத்தில்  கொண்டு, மருத்துவர் அறிவுரையின் பேரில்  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு, செவிலியர்கள் உதவியு டன் அழைத்து வரப்பட்டார். இங்கு அவ ருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பொதுத் தேர்வு எழுதினார். கல்வியின் முக் கியத்துவம் குறித்து இளம் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வின் அடையா ளமாக இந்த மாணவி அறுவை சிகிச்சை  செய்த நிலையில் தேர்வு எழுத வந்திருப்பது உணர்த்துகிறது என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.