districts

img

புதிய கண்டுபிடிப்புகளால் அசத்தி வரும் இளம்பிள்ளைச் சேர்ந்த இளைஞர்!

இளம்பிள்ளை, மே 14- புதிய கண்டுபிடிப்புகளில் அசத்தி வரும் இளம்பிள்ளைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுந ரின் மகன், அரசு உதவி புரிந்து, ஊக்கப்படுத் தினால் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள ஏழுமாத்தானுார் பகுதியைச் சேர்ந்த வர் வெங்கடேசன் (50). அரசு பேருந்து ஓட்டு நரான இவரது மனைவி வனிதா (42). இவர்க ளது மகனான யோக பிரதீப் (21), காகாபாளை யம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க இறுதி யாண்டு படித்து வருகிறார். இவரது சகோதரர் ஹரி பிரதீப் (17), சேலம் சோனா கல்லுாரியில் இளங்கலை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். யோக பிர தீப் சிறு வயதிலிருந்து, ஏதாவது புதியதாக மக்களுக்கு பயன்படும் வகையில் கண்டு பிடிக்க வேண்டும் என எண்ணத்தில் இருந்து  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சில புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து முயற்சி செய்தபோது, பல தோல்விகளை கண்டுள் ளேன். அப்போதெல்லாம் அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசனை, மனதில் நினைத்து கொண்டு விடாமுயற்சியுடன் என் பணியை மேற்கொள்வேன். அதன் விளைவாக, கடந்த  2019 ஆம் ஆண்டில் ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உயரே பறக்கும் ட்ரோனை மிகக்கு றைந்த செலவில் வடிவமைத்தேன். அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில், ரூ.2 ஆயி ரத்து 500 செலவில் வீட்டை சுத்தம் செய்யும் மினி ரோபோவை உருவாக்கினேன்.

வீட்டிலிருந்து வெளியூர்களுக்கு செல் லும்போது கூடவே எடுத்து செல்லும் வகை யில், சோலாரில் இயங்கும் மிகச்சிறிய அளவி லான பிரிஜ்ஜை 3 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கி வருகிறேன். நான் வீட்டிலிருந்து கல்லுாரிக்கு பேருந்தில் செல்லும் தினந்தோ றும் நின்று கொண்டு செல்வதால், இதற்கு தீர் வாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாக னத்தை ரூ.28 ஆயிரம் மதிப்பில் வடிவமைத் தேன். இந்த வாகனத்தை ஏற்கனவே சிலர் வடி வமைத்து இருந்தாலும், அதிலிருந்து நான் கண்டுபிடித்த ஸ்கூட்டர் வேறு வகையானது. ஏனென்றால் மற்ற இருசக்கர வாகனங்கள் டி.சி மோட்டாரில் இயங்கும். ஆனால், இது பி.எல்.டி.சி மோட்டாரில் இயங்கும். அதனால் டி.சி. மோட்டாரை காட்டிலும் இழுவை திறன் அதிகமாக இருக்கும். மேலும், 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், 55 கி.மீ. துாரம் செல் லும். மேலும், எங்காவது காரில் சென்றால் இதை மூன்று பாகமாக பிரித்து எடுத்து செல் லலாம். மேலும், 150 கிலோ அளவிற்கு எடையை வைத்துக்கொண்டு 42 கி.மீ. வேகத் தில் செல்லலாம். கைரேகை வைத்தால் மட் டுமே வண்டி இயங்கும் அளவில் உருவாக்கி யுள்ளேன். நான் ஏழையாக உள்ளதால், எனக்கு அரசு பொருளாதார ரீதியாக உதவி  செய்து, கண்டுபிடிப்புகளை அங்கீகரித்தால் தாய்நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன், என்றார்.