அவிநாசி, டிச.15- திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சிக் குட்பட்ட கணபதி நகர் பிரிவு மற்றும் கானக்காடு பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் மாநகராட்சி பகுதிகளில் சேக ரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை லாரிகள் மூலமாக எடுத்து வரப்பட்டு கொட்டப்பட்டு வரு கின்றன. இதனால் அப்பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் குடியிருப்போருக்கு சுவாச கோளாறு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதி களில் குப்பை கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், அரசி யல் கட்சியினர் ஞாயிறன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து எந்த வித நடவடிக்கைக்கும் உறுதியளிக்கப்படவில்லை. இத னால் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ள அப்பகுதி மக்கள் அடுத்த கட்டமாக தங்களது குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.