பென்னாகரம், ஏப்.15- பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலி யல் வன்கொடுமை செய்தவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பெரும் பாலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியாவார். இந்நிலையில், கடந்த ஜன.27 ஆம் தேதியன்று பெரும்பாலை அருகே உள்ள போடம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (50) என்பவர், வீட் டில் தனியாக இருந்தபோது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனையில் இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் விசாரிக்கையில் மேற்கண்ட சம்பவம் தெரியவந்தது. இது தொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்