districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

டி.என்.வி.செந்தில்குமார் எம்பி.,க்கு “சன்சாத் ரத்னா” விருது

தருமபுரி, ஜூலை 5- தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில் குமாருக்கு “சன்சாத் ரத்னா விருது” வழங்கப்பட்டது. சென்னையில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும்  அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்கள் அமைப்பு இணைந்து “சன்சாத் ரத்னா விருது” வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் டி.என்.வி.செந்தில்குமாருக்கு, தமிழகத்திலிருந்து சிறப்பாக செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதை ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கி கௌரவித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

வீடு புகுந்து திருடியவரை மடக்கி பிடித்த மக்கள்

கோவை, ஜூலை 5- மதுக்கரையில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள், அவரை காவல் துறையின ரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த அறிவொளி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவர் புதியதாக அதே  பகுதியில் வீடு கட்டி வருகிறார். இவர் தனது சகோதரர் கார்த்திக் என்பவருடன் புதிய வீட்டில் இரவு தூங்கி கொண்டி ருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2  வாலிபர்கள் நாகராஜின் வீட்டின் கதவை திறந்து உள்ளே  நுழைந்து, நாகராஜ் மற்றும் கார்த்திக்கின் செல்போனை திருடினர். ஏதோ சத்தம் வருவதை கேட்டு நாகராஜ் எழுந்த போது, 2 வாலிபர்கள் செல்போனை திருடி செல்வதை கண்டு  அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். அவரின் சத் தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மக்கள் வருவதை கண்டு  மற்றொரு வாலி பர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். பொதுமக்கள் மடக்கி பிடித்து மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த வாலிபரிடம் காவல் துறையினர் மேற் கொண்ட விசாரணையில், அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த  ஷபிக் அகமது (23) என்பதும், தப்பி ஓடியவர் அவரது நண் பர் ரியாஷ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஷபிக்  அகமதை கைது செய்தனர். மேலும், பொதுமக்கள் தாக்கி யதில் அவர் காயமடைந்ததால் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமானத்தில் வந்து கொள்ளையடிக்கும் கும்பல்

3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

கோவை, ஜூலை 5 – சுழற்சி முறையில் விமானத்தில் வந்து கோவையில் தொடர் கொள்ளை யில் ஈடுபட்ட வடமாநில கும்பலை சேர்ந்த 7 பேரை ஆர்எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.  இதுகுறித்து காவல்துறை வட் டாரங்கள் கூறுகையில், கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, செல் போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக புகார் வந்து கொண்டே இருந்தது. இதைய டுத்து கோவை மாநகர காவல் ஆணை யர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கண்கா ணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப் போது பூ மார்க்கெட்  பேருந்து நிறுத்தம் அருகே 7 பேர் கொண்ட கும்பல் ஒரு முதி யவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல் போனை திருடினர். இது போலீசார் பார் வையில் பட்டது. இதனையடுத்து 7  பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதைத்தொ டர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் ஜார்கண்ட்டை சேர்ந்த பக தூர் மகடோ (36), சந்தோஷ் (33), பப்லு  மகடோ (23) பீகாரை சேர்ந்த மனிஷ் மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற் றும் 10 வயது சிறுவன் என்பதும், அவர் கள் கூறிய தகவல் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கண்ட 7 பேரும் பீகார், ஜார் கண்ட்டை சேர்ந்தவர்கள் என்பது, வாரத் தில் ஒரு நாள் கோவை வந்து அறை எடுத்து தங்குவார்கள். எங்கு சென்றா லும் கும்பலாக சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு எது  கிடைத்தாலும் திருடியுள்ளார்கள். வாரத் தில் இரண்டு நாட்கள் திருப்பூர், பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட பகு திகளுக்கும் சென்று கொள்ளை அடிப் பதும் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். மேலும். கூட்டம் அதிகமாக உள்ள இடங் களுக்கு சென்று செல்போன் மற்றும் பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலும் இந்த  திருட்டு நடவடிக்கைகளை சிறுவர் களை மட்டுமே பயன்படுத்துவதும், கொள்ளை சம்பவங்களில் மற்றவர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந் துள்ளது. இவர்கள் ஒருவரை மாற்றி  ஒருவர் சுழற்சி முறையில் விமானத்தில் வருவதும், மற்றவர்கள் ரயில் மூலம்  வருவதை வாடிக்கையாக கொண்டுள் ளனர்.  திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடு பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்று பணத்தை ஆடம்பர மாக செலவு செய்துவிட்டு பணம் தீர்ந்த வுடன் மீண்டும் கோவை வந்து கொள்ளை அடித்து செல்வது தொடர்ந்து நடைபெற் றதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலிசார் வடமாநில கொள்ளை கும் பல் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை யும் கைது செய்து சிறையில் அடைத்த னர். சிறுவர்கள் மூன்று பேரை  காப்ப கத்தில் ஒப்படைத்தனர்.

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு

ஈரோடு, ஜுலை 5- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றி தழ் சரிபார்த்து சுமார் 30 ஆசிரியர்கள் கடந்த 9 ஆண் டுகளாக காத்திருக்கிறோம். இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்ப தால், தகுதியான 30 ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும் என ஈரோடு ஆட் சியரிடம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தகு தியான ஆசிரியர்கள் மனு அளித்தனர்.

இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு வேலம்பாளையத்தில் வரவேற்புக் குழு அமைப்பு

திருப்பூர், ஜூலை 5 - இந்திய மாணவர் சங்கத்தின் 21 ஆவது திருப்பூர் மாவட்ட  மாநாடு ஜூலை 30 அன்று, வேலம்பாளையம் நகரப் பகுதியில்  நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சிறப்பாக நடத்துவ தற்கு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. திங்களன்று மாலை அனுப்பர்பாளையம் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற்ற இந்த அமைப்புக் கூட்டத்திற்கு ஆர்.சுகுமார் தலைமை ஏற்றார். மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் தௌ.சம்சீர் அகமது, மாநாட்டின் முக்கியத்துவம்  குறித்து விளக்கிப் பேசினார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலா ளர் ச.நந்தகோபால், வரவேற்புக் குழு மற்றும் பணிக்குழுக் களை முன்மொழிந்து பேசினார். வரவேற்புக்குழு தலை வராக வி.பி.சுப்பிரமணியம், செயலாளராக அ.ஆறுமுகம், பொருளாளராக பி.சின்னச்சாமி, துணைத் தலைவர்களாக ஏ. விஸ்வநாதன், ஆர்.கவிதா, துணைச் செயலாளர்களாக, ஸ்ரீ ஹரி,எஸ்.ராம்கிருபாகர் ஆகியோர் உள்ளிட்ட 60 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரவீன் குமார், பொருளாளர் கல்கி, சிபிஎம் நகரக்குழு உறுப்பி னர்கள் த.நாகராஜன், பி.பாபு, மாதர் சங்க நகரப் பொருளாளர்  சாந்தி, வாலிபர் சங்க நிர்வாகி பி.ரகுபதி, பனியன் சங்க நிர் வாகி பாண்டியராஜ், மோட்டார் சங்க நிர்வாகி செல்வகுமார்,  மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகி ஜார்ஜ் வர்கீஸ் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

உழவர் சந்தை காய்கறி விற்பனை

விற்பனை திருப்பூர் ஜூலை 5- உடுமலை உழவர் சந்தை யில் கடந்த மாதம் 1832 விவ சாயிகள் மொத்தம் 5 லட்சத்து  99 ஆயிரத்து 818 கிலோ காய் கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம்  ரூ. 1 கோடியே 63 லட்சத்து  46 ஆயிரத்து 620 விற்பனை யானது . இந்த காய்கறிகளை பொதுமக்கள் 68ஆயிரத்து 336 பேர் வாங்கி பயனடைந் தனர்.

எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் தராமல் ஓட்டம் தேடிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்

கோவை, ஜூலை 5– பெட்ரோல் பங்க்கில் எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் தராமல் இளைஞர்கள் ஓட்டம் பிடித்த நிலையில் பங்க் ஊழி யர் தேடிப்பிடித்து போலிசிடம் ஒப்படைத்த சம்பவம் கோவை யில் நடைபெற்றுள்ளது. கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளை யத்தை சேர்ந்தவர் குணசேகரன் (62). இவர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவர் வழக் கம்போல இரவு வேலை செய்து கொண்டு இருந்தார். அப் போது அங்கு மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத் தில் வந்துள்ளனர். அவர்கள் வாகனத்திற்கு பெட்ரோலை நிரப்பிவிட்டு, அங்கிருந்து தப்பினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி குணசேகரன் அவர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் குணசேகரன் சக ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு அருகில் உள்ள இடங்களில் அந்த இளைஞர்களை தேடி அலைந்தார். இரவு நேரத்தில் தான் பார்த்த அங்க அடை யாளங்களை கொண்டு யார் அந்த நபர்கள் என்று தெரு தெரு வாக தேடினார். அப்போது பெட்ரோல் பங்கிற்கு வந்த இளை ஞர்களில் ஒருவரைம் மட்டும் குணசேகரன் பார்த்துவிட்டார். தொடர்ந்து அவரை குணசேகரன் மடக்கி பிடித்தார். பின்னர் கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த  செல்வகுமார் (27) என்பதும், தப்பியது அவரது நண் பர்கள் மனோஜ் கண்ணா மற்றும் மகாராஜா என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர்களை போலீ சார் தேடி வருகின்றனர்.

முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவு

கோவை, ஜூலை 5- கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவ சம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஈடு பட வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிர தாப் தெரிவித்துள்ளார்.  பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா  நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுமக் கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திட வேண்டும்.  முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப் பது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சியிலுள்ள சுகாதார  ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு வருகை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

கோவை, ஜூலை 5-  தமிழக சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண் டனர்.  தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடு கள் குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று ஆய்வு கூட்டம்  நடத்தினர். இக்குழுவின் தலை வர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் வேளாண்மைப் பல் கலைக்கழக, மகளிர் மேம்பாட்டு திட்டத் தின் ஆய்வறிக்கைகள் காலதாமதமாக சட் டப்பேரவைக்கு கொடுத்ததன் காரணங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடன் விளக் கம் கேட்டனர். மேலும், பல்வேறு துறை களை சார்ந்த அதிகாரிகளிடம் ஆய்வறிக் கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், மாவட்டத்தில் முடிவு பெறாமல் இருக்கும் அரசு திட்டங்கள் குறித்தும், தீர்வு காணப் படாத மனுக்கள் குறித்தும் விளக்கம் கேட் கப்பட்டது.  இந்த ஆய்வு கூட்டத்தில் இக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அப்துல் வஹாப், பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட் சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை வருவாய் அலுவலர், மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஜுலை 5- ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் தலைமையில் மின்  பயனீட்டாளர்களின் மாதாந் திர குறை தீர்க்கும் கூட்டம்  ஈரோடு கோட்ட அலுவல கத்தில் புதனன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் கருங்கல்பாளையம், மரப் பாலம், சூரம்பட்டி, ரங்கம்பா ளையம், வீரப்பன்சத்திரம், சம்பத்நகர், திண்டல் அக்ர ஹாரம் மற்றும் மேட்டுக் கடை, சித்தோடு, கவுந்தப் பாடி ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் தங்களின் குறைகளை தெரி விக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.