districts

img

எப்போ சார் முடியும் உங்க புராஜெக்ட்?

ஆறு ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

சேலத்தில், சீர்மிகு மாநக ராட்சி திட்டத்தின் கீழ் க டந்த நான்கு ஆண்டுக ளுக்கு மேலாக பாதாள சாக்கடை பணி கள், சாலைகள் புதுப்பித்தல், தண்ணீர் டேங்க் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆறு  ஆண்டுகளுக்கு மேலாகியும் சேலம் மாந கர பகுதிகளில் எந்தவொரு பணிகளும் முழுமை பெறாமல் ஆங்காங்கே கிடப் பில் போடப்பட்டுள்ளது. ஒரு சில பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சேலம்  மாநகர சாலைகளில் பயணிப்பது மிகுந்த  சவாலாக இருக்கிறது. குறிப்பாக, அம்மா பேட்டை, சீலநாயக்கன்பட்டி, செவ்வாய் பேட்டை, பொன்னம்மாபேட்டை, கொண் டலாம்பட்டி, நெத்திமேடு, லீ பஜார், குகை உள்ளிட்ட பிரதான சாலைகளில் நாள் தோறும் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, அவதிப்படுவது தொடர்கதையாகியுள்ளது  அதேபோல, பாதாள சாக்கடை பணி கள் முழுமை பெறாததால் சாலையி லேயே கழிவுநீர் தேங்கி நிக்கும் அவலம்  நீடித்து வருகிறது. இதனால் டெங்கு, மலே ரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடை களுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப் படாமல், சாலையிலேயே திறந்து வெளி யில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அதற்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகும் சூழலும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. ஒரு சில பிரதான சாலைகளில் உள்ள குழியில் பாதி  சாலை முழுவதும் சாக்கடை நீர் தேங்கி யுள்ளதால், மீதியுள்ள சாலையில் தான் வாகனம் பயணிக்கும் நிலைமையும் சேலம் மாநகர பகுதிகளில் நீடித்து வருகிறது. ஆண்டு கணக்கில் நீடிக்கும் ஸ்மார்ட்  சிட்டி திட்ட பணி எப்பொழுது முடிவடை யும் என்று சேலம் மாநகர மக்கள் கேள்வி  எழுப்பி வருகின்றனர். கடந்த சில மாதங்க ளாக மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பி னர்களே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்பொழுது முடியும் என்று விவாதித்து வருகின்றனர். இதற்கு மாநகராட்சி நிர் வாகம் பதில் அளிக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இரண்டு முறை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி யாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப் பட்டு, முதல்வரின் மூலம் விருது மற்றும்  பரிசுத்தொகை பெற்றது கவனிக்கத்தத் கது. சாலை வசதி, பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், குறைந்தபட்ச தொழிலா ளர்களை வைத்து பணிகளை துரிதப்படுத் தாமல் மாநகராட்சி நிர்வாகம் உள்ளதாக சேலம் மாநகர மக்கள் தங்களது வேத னையை தெரிவித்துள்ளனர். -எழில், சேலம்.