districts

img

இடிந்து விழும் நிலையில் வீடுகள் அச்சத்தில் வாழும் தேவராயபுரம் மக்கள்

கோவை, டிச.8- இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுக ளுக்கு பதிலாக புதிய வீடு களை அரசு கட்டித்தர வேண் டும் என்று தேவராயபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், தேவ ராயபுரம் ஊராட்சியில் சென் றாம்பாளையம், வேலாயுதம் பாளையம், வடக்கு நல்லிக் கவுண்டன்பாளையம், தேவ ராயபுரம் உள்ளிட்ட கிராமங் கள் உள்ளன. இந்த கிராமங் களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்க ளுக்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் சுமார் 110 தொகுப்பு வீடு கட்டித்தரப் பட்டன. இந்த வீடுகளில் 500க்கும் மேற்பட் டோர் தங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், இந்த தொகுப்பு வீடுகள் சிதி லமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. வீட்டின் கூரை களில் பூசப்பட்டிருக்கும் சிமெண்ட் கலவை அவ்வப்போது பெயர்ந்து விழுவதாகவும், இந்த வீடுகள் இடிந்து விழுந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் என்றும் இந்த  பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலங்களில் இந்த வீடு களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வும், சிதிலமடைந்து காணப்படும் தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.