ஈரோடு, மே 27 – மற்ற கட்சிகள் மக்களைக் கொடி பிடிப்பவர்களாக வைத் திருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மக்களை அரசியல் படுத் தும் பணியில் ஈடுபடுவதாக ஈரோடு டில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர் வக்கோட்டை சட்டமன்ற உறுப்பின ருமான எம்.சின்னதுரை உரை யாற்றினார். ஈரோடு மாவட்டத்தில் உழைக் கும் மக்களின் உரிமைகளை வென் றெடுக்க சபதமேற்கும் 139 ஆவது மே தின பேரணி, பொதுக்கூட்டம் மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே திங்களன்று நடைபெற் றது. மொடக்குறிச்சி தாலுகா கமிட்டி உறுப்பினர் டி.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் கே.சண்முகவள்ளி வரவேற் றார். இதில், மூத்த தோழர் கே.துரை ராஜ், ப.மாரிமுத்து, சிபிஎம் மாவட் டச்செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகே சன், தாலுக்கா செயலாளர் எம்.சசி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில், எம்.சின்னதுரை எம் எல்ஏ சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், 8 மணி நேர வேலைக்கான போராட்டம்: உலக அளவில் வளர்ச்சியடைந்த முதலா ளித்துவ நாடுகள் கூட 8 மணி நேர வேலையைத் தடுப்பதில் தோல்வி யடைந்துள்ளன. இந்தியாவில் 8 மணி நேர வேலைக்கு ஆபத்து ஏற் பட்டுள்ளது, அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்து வருகின் றன. தொழிலாளர் சட்டங்கள்: இந் திய அரசு 44 தொழிலாளர் சட்டங் களை 22 பிரிவுகளாகவும், 4 தொகுப் புகளாகவும் மாற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலைக்கான மசோ தாவை அறிமுகப்படுத்தியபோது, அதை எதிர்த்த ஒரே கட்சி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். பல் வேறு கட்சிகளின் எதிர்ப்பும், சிஐ டியுவின் வேலைநிறுத்த அறிவிப் பின் காரணமாக தமிழ்நாடு அரசு அந் தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. தமிழக வரலாற்றில் முதல்முறை யாக ஒரு சட்டம் திரும்பப் பெறப் பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் காரணம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இனிமேல் கால முறை ஊதியமே கிடையாது என்ற நிலைக்கு வந்துவிட்டது, கம்யூ னிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு வந் தால் தேவைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். தற்போது உழைப் பிற்கேற்ற ஊதியமும் இல்லை, தேவைக்கேற்ற ஊதியமும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும் தொழி லாளி வர்க்கம் குறைந்தபட்ச ஊதி யத்திற்கே போராடிக் கொண்டி ருக்கிறது. மோடி அரசு கார்ப்பரேட்டு களை வளர்க்கிறது, வகுப்புவாதத் தையும், முதலாளித்துவத்தையும் இணைக்க முயற்சிக்கிறது. இத னால் வறுமை, வேலையின்மை ஏற் படுகிறது. அதை மறைக்க சாதி, மத அமைப்புகளைப் பயன்படுத்துகி றது. ஜூலை 9ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு இந்திய தொழிற் சங்கங்கள் அறைகூவல் விடுத் துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி இந்த பொது வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக்க வேண்டும் என தெரி வித்துள்ளது. தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுபட்டு இப் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம். கேரளாவைப் போல தமிழ் நாட்டிலும் தமிழ்நாடு வங்கி என் பதை உருவாக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த வட்டி யில் கடன் வழங்க வேண்டும். சமூ கப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு, பொருளாதாரப் பாகுபாடுகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. வேறு எந்தக் கட்சியும் இதற்காகக் குறிப் பிடத்தக்க முயற்சிகள் எடுக்க வில்லை. அனைத்து அரசியல் கட்சி களும் மக்களை கொடி பிடிக்க பயன்படுத்திகொண்டி ருக்கையில், மார்க்சிஸ்ட் கட்சி மட் டுமே மக்களை அரசியலாய் சிந் திக்க, மக்களை அரசியல் படுத்திக் கொண்டுள்ளது என்றார்.