districts

கோவை, திருப்பூர் சிறுதொழில் பிரச்சனைகளில் சிறப்புக்கவனம்!

திருப்பூர், ஜூலை 30- தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறிப் பாக கோவை, திருப்பூர் பிராந்தியத்தில் உள்ள  சிறு, குறு தொழில் துறை சந்திக்கும் பல்வேறு  பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் நேரடி யாக தலையிட்டு சிறப்புக்கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் ஒப்பீட்டளவில்  கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் சிறு, குறு தொழில்கள் நிறைந்த மாவட்டங்களாக உள் ளன. கைத்தறி, விசைத்தறி, நூற்பாலை, பின்ன லாடை உள்ளிட்ட ஜவுளித் தொழில்களும், இன் ஜினியரிங், மோட்டார் பம்ப், பவுண்டரி எனும் வார்ப்புத்தொழில், கோழிப்பண்ணை, லாரித் தொழில், ரிக் எனப்படும் ஆழ்துளை குழாய் அமைக்கும் லாரி தொழில், வெள்ளி, தங்க வேலை பட்டறைகள், பாத்திர உற்பத்தி என ஏராளமான சிறு, குறு தொழில்கள் இங்கு இயங்கி வரு கின்றன. தாராளமயக் கொள்கை  கடந்த 33 ஆண்டு காலமாக அடுத்தடுத்து வந்த ஒன்றிய அரசுகள், பின்பற்றி வரும் உலக மயம், தனியார்மயம், தாராளமயம் ஆகிய கொள் கைகளின் விளைவாக விவசாயிகள் உள்பட  பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக மிகப்பெரும் வேலைவாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு தொழில் துறையினரும் மிகக் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

சுனாமி தாக்குதல்

குறிப்பாக மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த 10 ஆண்டு காலத்தில் சிறு, குறு தொழில் துறையினர் வரலாறு காணாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு மோடி  தன்னிச்சையாக திணித்த ரூ.500, ரூ.1000 செல் லாது என்ற  பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்துறையினர் மீது ஒரு சுனாமியைப் போல் தாக்கி நிலைகுலையச் செய்தது. அத்து டன் 2017ஆம் ஆண்டு எந்தவித கலந்தாலோச னையும் செய்யாமல் தன்னிச்சையாக மேலி ருந்து திணிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பும் சிறு, குறு தொழில் துறையினருக்கு ஒரு நிரந்தர  அடிமைச்சங்கிலியைப் போல் பிணைத்துள் ளது. இந்த இரு தாக்குதல்களும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே என்பது தற்போதைய அனுப வம் உணர்த்துகிறது. இது போதாதென்று மூலப் பொருட்கள், உதிரி பாகங்கள் விலையேற்றம், சிறு, குறு தொழில்களுக்கு வங்கிகள் ஏற்படுத் தும் கெடுபிடி, எளிதில் கடன் கிடைக்காத நிலை,  குறுகிய காலம் கடனைத் திரும்பச் செலுத்த இய லாத நிறுவனங்களின் வங்கிக்கணக்கை முடக்கு வது, விவசாயம், உள்நாட்டு தொழில் நெருக்கடி, ஒன்றிய அரசின் பணவீக்கம் உள்ளிட்ட கார ணங்களால், மக்களின் வாங்கும் சக்தி சுருங்கி, சிறு, குறு தொழில் துறையினருக்கு சந்தை வாய்ப்பு குறைந்திருப்பது ஆகியவையும் கடும் தாக்குதலை ஏற்படுத்தி உள்ளன.

தமிழக மக்களின் நம்பிக்கை

ஒன்றிய அரசின் தொடர் தாக்குதல்களால் கடும் அதிருப்தியில் இருந்த தமிழக மக்கள் 2014 மட்டுமின்றி 2019, 2024 தேர்தல்களிலும் பாஜக மற் றும் கூட்டணியை தெளிவாக நிராகரித்து தோற் கடித்தார்கள். பாஜகவுடன், அதிமுக கூட்டு சேர்ந் திருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் நம்பிக்கையுடன் திமுக  அணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த னர். வெந்த புண்ணில் வேல் தமிழக மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பெண் களுக்கு உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட பல சமூக நலத்திட் டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருவது வர வேற்கத்தக்கது. அதேசமயம் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் சிறு, குறு தொழில் துறையினரிடம் அவ நம்பிக்கையை யும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இன் றைய நெருக்கடியான நிலையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம், மின் நிலைக் கட்டணம், சொத்து வரி உயர்வு ஆகியவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாக இருக்கிறது. மத்திய பிரதேச அழைப்பு இந்த சூழ்நிலையில் சமீப சில நாட்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் துறையினரை மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த முதலமைச்சர், மாநில உயர் அதி காரிகள் நேரில் சந்தித்து, அங்கு வந்து தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளனர். சில தொழில் முனைவோருடன் புரிந்துணர்வு ஒப்பந் தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துருவாக்கம்

தொழில் வளர்ச்சியில் மத்திய பிரதேசத்தை விட பல்வேறு தர மதிப்பீடுகளில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தில் இருந்து தொழில்கள் அங்கு இடம் பெயரும் என்று சமூக ஊடகங் களில் வெகுவாகப் பரப்பப்படுகிறது. சிறு, குறு தொழில் துறையில் ஆழமாகி இருக்கும் நெருக் கடியையும், அதனால் அந்த தொழில் முனை வோரிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி உணர்வை யும் பயன்படுத்தி தொழில்கள் இடம் பெயரக் கூடிய ஆபத்து என்று கருத்துருவாக்கம் செய்யப் படுகிறது. மாநில அரசின் கடமை எனினும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு சிறு,  குறு தொழில்கள் மிக முக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றன. எனவே இந்த தொழில்க ளைக் காப்பாற்றி, வலுப்படுத்துவது மாநில அர சின் கடமையாகும். வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்க மாநில அரசு முயற்சி செய்தாலும், இங்கிருக்கும் சிறு, குறு, பாரம்பரியத் தொழில் களைப் பாதுகாப்பதே வேலைவாய்ப்புக்கு முதன்மையான பங்களிப்பு செய்யும். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் படும் கோயமுத்தூரிலும், குட்டி ஜப்பான் என  அழைக்கப்படும் திருப்பூர் மாநகரத்திலும் தொழி லாளர் வேலைவாய்ப்புச் சந்தையை வெட்டி சுருக்குவதாக அரசின் நடவடிக்கைகள் உள்ளன.  இது ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலை யின்மை, வருமான குறைவு என தொழிலாளர் கள் சந்தித்து வரும் நெருக்கடி நிலையில் இருக் கும் தொழில்கள் இடம் பெயர்ந்தால் மேற்கு மண்டல பொருளாதாரமே சீரழிவிற்குள் தள்ளப் படும். தேவை சிறப்புக்கவனம் எனவே, மின் கட்டணம், மின் நிலைக்கட்ட ணம், சூரிய சக்தி மின்சார பயன்பாட்டுக்கு விதிக் கப்படும் கட்டணம் ஆகியவற்றில் சிறு, குறு  தொழில் துறையினர் கோரிக்கையை ஏற்று  அவற்றை உடனடியாகக் குறைக்க வேண்டும். தொழில் துறையினரின் இதர பல பிரச்சனைகள் மீது தமிழக முதல்வர் நேரடியாகத் தலை யிட்டு, சிறப்புக்கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.