districts

img

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி இறுதி கட்ட சூறாவளி பிரச்சாரம்: தாரை தப்பட்டை முழங்க, ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு

திருப்பூர், பிப்.17- திருப்பூர் மாநகராட்சியில் மதசார் பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிக ளின் ஆதரவுடன் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கள் இறுதிக் கட்ட தீவிர சூறாவளி பிரச் சாரம் மேற்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி 1ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜீ. மீனாட்சி, 9ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.வசந்தி ஆகியோ ருக்கு ஆதரவாக இருசக்கர வாகனப் பிரச்சாரம் வியாழனன்று காலை  கூத்தம்பாளையம் பிரிவில் தொடங்கி யது. அங்கிருந்து வீதி, வீதியாக முதலா வது வார்டின் அனைத்து குடியிருப் புப் பகுதிகளிலும் வாகனப் பேரணி சென்றது. இதைத் தொடர்ந்து 9ஆவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து குடி யிருப்பு பகுதிகளிலும் இந்த பிரச்சாரப் பயணம் சென்றது. இதில் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் உள்பட கட்சி அணி யினர் நூற்றுக்கணக்கானோர் இருசக் கர வாகனங்களில் சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு மக்களிடம் இறுதிக்கட்ட ஆத ரவு திரட்டினர். மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகி களும் உடன் வந்தனர்.

இந்த வாகனப் பேரணி மதியம் 2 மணியளவில் அங் கேரிபாளையம் பகுதியில் நிறைவ டைந்தது. அதேபோல், 14ஆவது வார்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.கவிதாவுக்கு வாக்கு கேட்டு வாகனப் பேரணி அனுப்பர்பாளையம் கட்சி அலுவலகம் முன்பு தொடங்கி யது. 14ஆவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து வீதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந் தோர் சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்தை கையில் ஏந்தி ஆதரவு கோரினர். இந்த பேரணி பெரியார் காலனி பகுதியில் நிறைவடைந்தது. 17ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஈ.பி.ஜெய கிருஷ்ணனுக்கு ஆதரவாக வார்டு முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தி இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் உள்பட  மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சியினர் உடன் இருந்தனர். பெண்கள் குழந்தைகள் உள்பட பகுதி  மக்கள், வேட்பாளர் ஜெயகிருஷ்ண னுக்கு உற்சாகமாக ஆதரவு தெரிவித் தனர். 28ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் வீ.பாலசுப்பிர மணியம், சரளைக்காடு மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் பணி மனை பகுதியில் இருந்து இறுதி கட்ட மாக வாக்காளர்களை நேரில் சந்தித்து  ஆதரவு திரட்டினார். இதில் மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சாவித்திரி, செ.மணிகண் டன் உள்பட தோழமை கட்சியினரும் உடன் பங்கேற்றனர். இந்த வார்டின் அனைத்து பகுதிகளிலும் நடை பயண மாக ஊர்வலம் சென்று மக்களிடம் ஆத ரவு திரட்டினர். 29ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி  வேட்பாளர் செ.சின்னசாமிக்கு ஆத ரவாக இந்த வார்டுக்கு உட்பட்ட திரு விக நகர் குடியிருப்பு பகுதியில் இருந்து இருசக்கர வாகனப் பிரச்சார பேரணி தொடங்கியது.இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற  உறுப்பினர் சபுரோ எம்.ரங்கசாமி உள் பட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்ட், கொமதேக உள்பட அனைத்து தோழமை கட்சிகளைச் சேர்ந்தோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆத ரவு திரட்டினர்.

வார்டின் அனைத்துப் பகுதிகளிலும் சென்ற இப்பேரணி ஜவான் வீதி பகுதியில் நிறைவடைந் தது. 52ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பொம் முதுரைக்கு ஆதரவாக இறுதிக் கட்ட  வாக்கு சேகரிப்பு ஊர்வலம் வியாழக் கிழமை மாலை தென்னம்பாளையம் தேர்தல் பணிமனையில் இருந்து தொடங்கியது. இதில் நடைபயணமாக தென்னம்பாளையம், முத்தையன் லே அவுட், முத்தையன் கோயில் பகுதி  குடியிருப்பு, கே.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் முடிவடைந் தது. இதில் திமுக உள்ளிட்ட மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின ரும் திரளானோர் கலந்து கொண்ட னர். 53ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.மணிமேகலைக்கு ஆதரவாக வியாழக்கிழமை காலை ஏ.பி.நகர் பகுதியில் இருசக்கர வாக னப் பேரணி தொடங்கியது. மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் பங்கேற்று ஆத ரவு திரட்டி உரையாற்றினார். கட்சி யின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி உள்பட மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியினர் பங் கேற்று அந்த வார்டு முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினர். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சென்ற இடங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் உற்சாக ஆதரவு  கொடுத்தனர். ஆரத்தி எடுத்தும், மலர்  தூவியும், துண்டு அணிவித்தும் வர வேற்றனர். அனைத்துப் பகுதிகளி லும் தாரை தப்பட்டை முழங்க சென்ற உச்சக் கட்ட தேர்தல் பிரச்சார பயணத் துக்கு திருப்பூர் மாநகர மக்களிடம் சிறப்பான ஆதரவு கிடைத்தது.