districts

img

திருப்பூர்: கார் தீப்பற்றி எரிந்து நாசம்

திருப்பூர், பிப்.18 - திருப்பூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து சந்திர சேகர் என்பவர் தனது காரின் மூலம் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, திருப்பூர் பல்ல டம் ரோடு லட்சுமி திருமண மண்டபம் அருகில் வந்த போது திடீரென காரில் சத்தம் வந்துள்ளது. இதைய டுத்து அவர் காரை ஒரமாக நிறுத்தி விட்டு இறங்கி பார்க்க முயன்றபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த  அவர் காருக்குள் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர், எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் கார் உரிமையாளர் சந்திர சேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.