கோபி, பிப்.15- கோபி அருகே அடையாளம் தெரி யாத விலங்கு கடித்து மூன்று ஆடுகள் பலியான சம்பவம், அப்பகுதி மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள கே.மேட்டுப்பா ளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக் குமார். கூலி தொழிலாளியான இவர் ஆடு கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு ஆடு களை கட்டி விட்டு உறங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது, மூன்று ஆடுகளும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்ப தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்தியதில், ஆடுகளை கடித்து குதறியது சிறுத்தை இல்லை என உறுதி செய்தனர். மேலும், ஆடு களை கடித்து குதறிய மர்ம விலங்கு என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஆடுகளை கொன்றது எந்த விலங்கு என்பது தெரியாததால், அப்பகுதியி னர் பீதி அடைந்துள்ளனர்.