districts

img

1 லட்சம் பேர் வருகை; ரூ.1.50க்கு கோடி புத்தகங்கள் விற்பனை! சாதனை படைத்தது 20 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா

திருப்பூர், பிப்.5 - திருப்பூரில் 11 நாட்கள் நடைபெற்ற 20 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் 1 லட் சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து சென்றனர். மொத்தம் ரூ.1 கோடியே 50  லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு திருப்பூர்  மக்களின் ஆதரவு பெருகி வருவதை உணர்த் துவதாக இந்த ஆண்டு பார்வையாளர் வரு கையும், புத்கக விற்பனையும் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்  சார்பில் 20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா  ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம்  தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற் றது. காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல்  வளாகத்தில் நடைபெற்ற இந்த புத்தகத் திரு விழாவில் மொத்தம் 152 அரங்கங்கள் அமைக் கப்பட்டிருந்தன. முன்னணி பதிப்பகங்கள், புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையா ளர்கள் என பல்வேறு புத்தக நிலையங்கள் பங் கேற்றிருந்தனர். பொதுவாக திருப்பூரின் தொழில் வர்த்தக  நிலை தொய்வடைந்து காணப்படுவதால் புத் தக விற்பனை எப்படி இருக்கும் என்ற கேள்வி  பலரது மனதில் ஏற்பட்டது. ஆனால் அதை யெல்லாம் மீறி நம்பிக்கை அளிக்கும் விதத் தில் புத்தக வாசகர்கள், மாணவ, மாணவிகள்,  பெண்கள், சிறார்கள் மற்றும் ஆர்வலர்கள், பார்வையாளர்கள் வருகையும் கடந்த காலத்தை விட அதிகளவில் இருந்தது. புத் தக விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இதில் பங்கேற்ற புத்தக விற்பனையாளர் களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படை யில் ரூ.1 கோடியே 50 லட்சம் அளவுக்கு புத்த கங்கள் விற்பனை ஆகி இருப்பது தெரிய வந்தது.

இளைய தலைமுறையிடம் பரவலாக புத் தக வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டி ஆரோக்கி யமான பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கண்காட்சி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பலன் இருக்கிறது என்ற நம்பிக்கை அளிப்ப தாக மாணவ, மாணவிகள் வருகை இருந்தது.  தனியார் மற்றும் அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாண விகள் புத்தகக் கண்காட்சியைப் பார்வை யிட்டு புத்தகங்கள் வாங்கிச் சென்றனர். குழந்தைகள் சிலர் தங்கள் உண்டியல் சேமிப்பில் புத்தகங்களை வாங்குவதாகத் தெரிவித்தனர்.அதற்கேற்ப மாணவர் ஒருவர்  புத்தகக் கண்காட்சிக்கு தனது உண்டிய லையே கொண்டு வந்து, புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் முன்னிலையில் அந்த உண் டியலை உடைத்து அதில் தான் சேமித்து வைத் திருந்த பணம் ரூ.460க்கு  புத்தகங்கள் வாங்கிச்  சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது. புத்தக விற்பனைக்கு இடையே புத்தகங் களை வாங்கும் ஓர் அரங்கும் இடம் பெற்றிருந் தது. அதுதான் சிறைத்துறை அரங்கம். சிறை யில் இருக்கும் கைதிகளுக்காக அங்குள்ள  நூலகங்களில் வைப்பதற்கு அந்த துறை யைச் சேர்ந்த காவலர்கள் புத்தகங்களைச் சேமித்தனர். ஏறத்தாழ 2500 நூல்களை பார் வையாளர்கள் அன்பளிப்பாக அந்த அரங்கத் தில் காவலர்களிடம் வழங்கினர். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணனும் இந்த கண்காட்சியில்  ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் அரங்குக ளைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிய துடன், சிறைத்துறைக்கும் புத்தகங்களை வழங்கினார். இது புத்தக வாசிப்புப் பழக்கத் துக்கு கம்யூனிஸ்டுகள் அளிக்கும் முக்கி யத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருந் தது. இதுதவிர மாலை நேர சிந்தனையரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வந்த அறிஞர் கள், கருத்தாளர்கள் என பலரும் புத்தக கண் காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை  வாங்கிச் சென்றனர். பள்ளி நூலகங்களுக் கும் ஏராளமான புத்தகங்களை கல்வி நிறுவ னத்தார் வாங்கிச் சென்றனர்.

காலை நேரங்களில் மாணவ, மாணவிக ளுக்கான நிகழ்வுகளும், மாலை நேரத்தில் கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்வு களும் நடத்தப்பட்டன. மேடை நிகழ்வுகளில் தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசுப் பள்ளி களின் மாணவ, மாணவிகளும் நேர்த்தி யாக, அழகாக கலை நிகழ்ச்சிகளை நடத்தி  பார்வையாளர்கள் வெகுவாக ஈர்த்தனர். வழக்கமாக புத்தகத் திருவிழாவிற்கு முன்ன தாக நடத்தப்படும் மாணவ, மாணவியர் கலை  இலக்கிய திறனாய்வுப் போட்டிகளில் இம் முறை முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். எவ்வித  பாரபட்சமும் இல்லாமல் சிறப்பான படைப்பு கள் தேர்வு செய்யப்பட்டு ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் பரிசளிக்கப்பட்டன. இளம் மாணவர் நெஞ்சங்களில் புதிய உய ரத்தைத் தொட வேண்டும் என்ற கனவை விதைப்பதாக இருந்தது. எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையே இப்புத்தகத் திருவிழா வெற்றிகர மாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  ஆண்டும் முந்தைய ஆண்டை விட சிறப்பாக நடைபெற்றது என்ற சாதனையைப் பதித்து  வருகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர் கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், கல் வியாளர்கள், மாணவர்கள், ஏழைகள், பணக் காரர்கள் என சமூகத்தின் எல்லா தரப்பின ரும் ஓர் ஆரோக்கியமான பண்பாட்டு நிகழ் வில் பங்கு பெற்று வருகின்றனர். 20 ஆண்டு கால தொடர் பயணத்தில் ஒரு தலைமுறையே  புத்தக வாசிப்பு, ஆரோக்கியமான சிந்தனை,  அதற்கேற்ற செயல்பாடு என்பதை நோக்கி ஈர்க்கப்படும் வேலையை அமைதியான முறையில் திருப்பூர் புத்தகத் திருவிழா சாதித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளில் முகம் தெரியாத பலர் புத் தகத் திருவிழா குழுவினரிடம் நேரிலும், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும்  எக்காரணம் கொண்டும் புத்தகத் திருவிழா நடத்துவதை நிறுத்தி விடாதீர்கள், விட்டு விடா தீர்கள் என்று தங்கள் கருத்தைப் பதிவு செய்த னர். திருப்பூர் மக்களின் உள்ளங்களில் ஆழ மாக வேரூன்றிய புத்தகத் திருவிழா  தொடர்ந்து நடைபெறும், உங்கள் ஒத்துழைப் புடனும், மக்கள் ஒத்துழைப்புடனும் நடத்தப்ப டும் என்று புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்க ளும் உறுதியளித்தனர்.