திருப்பூர், மே 26- 10 ஆண்டுகால பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காங்கேயம் அருகே உள்ள தளிஞ்சிகாட்டுபுதூர் கிராமத் திற்கு வியாழனன்று பேருந்து இயக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சி, தளிஞ்சிகாட்டு புதூர் கிராமத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டு காலமாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக் கையை ஏற்று, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாத னின் நடவடிக்கையில் கே6 என்ற எண் கொண்ட பேருந்து உரிய வழித்தடத்தில் வியாழனன்று இயக்கப்பட்டது. இதனால் பொத்தியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிரா மங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைப்படுத்த அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வரவும் பேருந்து வசதி மிகவும் பயனுள்ளதாக இருக் கும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். முன்னதாக, தளஞ்சிகாட்டுபுதூர் பகுதிக்கு வந்த அரசு பேருந்தை ஊராட்சி மன்ற துணை தலைவர் திருநாவுக் கரசு, திமுக ஒன்றிய கழக பொறுப்பாளர் பி.அப்புகுட்டி, பொறுப்புக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, தொமுச தலை வர் சென்னியப்பன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உற்சாக மாக வரவேற்றனர்.