நாமக்கல், மே 16- குமாரபாளையத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் என்.சக்தி வேல் தலைமையில் தீக்கதிர் சந்தா வழங்கும் சிறப்பு பேரவை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் பொறுப்பா சிரியருமான எம்.கண்ணன் பங்கேற்று சந்தாக்களை பெற் றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.அசோகன், மூத்த தலைவர் எஸ். ஆறுமுகம், தர்ம லிங்கம் மற்றும் நகர குழு உறுப்பினர்கள் காளியப்பன், சண் முகம், கந்தசாமி, சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பேரவை கூட்டத்தில் 17 சந்தாவிற் கான தொகை வழங்கப்பட்டது.