உதகை, ஜூன் 28- ஊதியம், வருங்கால வைப்புநிதி உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலாவில் உள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு தேயிலை தோட் டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை உள் ளது. இதில் 300க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந் நிலையில், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 2020-21 ஆம் ஆண்டிற்கான போனஸ், விடுப்பு ஊதியம், மருத்துவ பலன் கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல் வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத் தப்பட்டும் இதுவரை சுமூக தீர்வு ஏற்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த தொழி லாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி கடந்த 2 வாரமாக வேலைக்கு செல்லாமல் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாத ஊதியம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிஐ டியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி தொழிற்சங் கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் தொழிற்சங்க கூட் டமைப்பு நிர்வாகிகள் மாதேவன், பழனி, ருத் ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், கஞ்சித்தொட்டி திறந்த போராட்ட மும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து குந்தா வட்டாட்சியர் இந்திரா, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் குமார், எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் மேலாளர், தொழிற்சங்கத்தின் சார்பில் சிஐ டியு செயலாளர் அலியார், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் போஜராஜ், ஐஎன்டி யுசி செயலாளர் வின்சென்ட் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. எனவே, தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிக்கு செல்வதை புறக் கணிக்க போவதாகவும், தொடர்ந்து கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித் தனர்.
சிஐடியு காத்திருப்புப் போராட்டம்
இந்நிலையில், தாய்சோலா எஸ்டேட் டில் செவ்வாயன்று சிஐடியு மாவட்ட தலை வர் சுந்தரம் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கர லிங்கம், விவசாய சங்க தலைவர் அலியார், சிஐடியு தோட்ட சங்க கிளைச்செயலாளர் ருத் ரன், ஏஐடியூசி எல்.மோகன், ஐஎன்டியூசி பழனி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.