திருப்பூர், மே 27 - நடப்பு 2025 – 2026ஆம் ஆண்டுக்கான திருப்பூர் மாவட்ட கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் செவ்வாயன்று வெளியிட்டார். இதில் வேளாண்மை, சிறு, குறு தொழில்கள் வீட்டுக்கடன், கல்விக்கடன் உள்ளிட்டு மொத்த கடன் வழங்க ரூ.45 ஆயிரத்து 432 கோடியே 72 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஆண்டுதோ றும் ஆண்டு கடன் திட்டம் வெளியிடப்படும். அது போல, இந்த 2025-26 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டார். 2025-26ஆம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன்களுக்கு மொத்த திட்ட இலக்கு ரூ.45 ஆயிரத்து 432 கோடியே 72 லட்சம் ஆகும். இதில் வேளாண்மை துறைக்கு ரூ.18 ஆயிரத்து 808 கோடியே 1 லட்சமும், சிறு, குறு தொழில் துறைக்கு ரூ.25 ஆயி ரத்து 600 கோடியே 42 லட்சமும், பிற முன்னுரிமை கடன்களுக் கான வீட்டுக்கடன், மரபுசாரா எரிசக்திக்கடன், சமூக உட்கட் டமைப்பு, கல்விக் கடன்களுக்கு ரூ.ஆயிரத்து 24 கோடியே 29 லட்சமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரி வித்தார். மேலும் கல்விக்கடனுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்க நடவ டிக்கை எடுக்கவும், திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து வங்கிக ளும் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.துர்க பிரசாத்; மேலா ளர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.