districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

உடுமலை, ஜூலை 2 - அரசுத் துறையில் காலிப்பணியிடங் களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தினர் உடுமலை, அவிநாசி ஆகிய பகுதிகளில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு துறையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு காலமுறை ஊதியத்தில் வேலைகளை வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்  செவ்வாயன்று உடுமலை மற்றும் மடத்துக்கு ளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை  நடைமுறை படுத்த வேண்டும். சத்துணவு,  அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்,  ஊர்ப்புற நூலகர் மற்றும் எம்.ஆர்.பி செவிலி யர் உள்ளிட்ட துறைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்  பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை  பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே அரசு துறையில் கருணை அடிப்ப டையில் பணி நியமனம் 25 சதம் வழங்கப் பட்டு வந்தது 5 சதமாக குறைத்ததை திரும்ப  பெற வேண்டும். சத்துணவு திட்டத்தில்  பணியாற்றி இறந்தோரின் வாரிசுக ளுக்கு கருணை அடிப்படையில் பணி நிய மனம் வழங்க வேண்டும். அரசு அலுவல கங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப் பளுவை குறைத்திடவும், அலுவலக பணி நேரத்திற்கு பின்பு, மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும். முத லமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் சத்துணவு ஊழி யர்களைக் கொண்டு சத்துணவு மையங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மடத்துக்குளம்: மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட் டக்கிளை தலைவர் என்.சிவக்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலச் செயலாளர் எ. அம்சராஜ் மற்றும் மாவட்டப் பொருளாளர் எஸ்.முருகசாமி, வட்டக்கிளை செயலாளர் பாலு பேசினார்கள்.  உடுமலை: உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட் டக்கிளை செயலாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எ. அம்சராஜ், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணியம் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள்  வைரமுத்து, மதன்குமார், செல்லமுத்து  உட்பட திரளானோர் பங்கேற்றனர். அவிநாசி: அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்ட கிளைத் தலைவர் சின்ராஜ் தலைமை  வகித்தார். வட்ட கிளைச் செயலர் கருப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட  இணைச் செயலாளர் ராமன் பேசினார். பொறுப்பாளர் இராஜேந்திரன் நன்றி தெரி வித்தார்.