districts

img

மாநகரின் மையப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை

கோவை, செப்.26-  கோவை மாநகரின் மையப்பகுதி யில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத் கர் சிலையை மாவட்ட நிர்வாகம் நிறுவ வேண்டும் என தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட மாநாட்டு தீர்மா னத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4 ஆவது கோவை மாவட்ட மாநாடு அன்னூர் மகிரிஷி (தோழர் சந்துரு நினைவரங்கம்)-ல் நடைபெற்றது. மாவட்ட தலைவர் யு.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், அன்னூர் பேரூராட்சி 8 ஆவது வார்டு உறுப்பி னர் முகம்மது முசீர் வரவேற்புரை யாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து பொதுபள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையாற்றி னார். மாநட்டு அறிக்கையை மாவட்ட செயலாளர் இரா.ஆறுச்சாமி, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் வேலை அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்மொழிந்தனர். 

முன்னதாக, மாநாட்டில் மௌனத் தின் சாட்சியங்கள் ஆசிரியர் எழுத்தா ளர் சம்சுதீன் ஹீரா, சாதி மறுப்பு தம் பதியினர் தோழர்கள் க.ஸ்ரீநிவாஸ் ப. சந்திரிகா தம்பதியினர், சிங்கிள் சோர்ஸ் இயக்குனர் ஜின், 4000 கிலோ மீட்டர் சைக்கிள் பிரச்சாரம் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர், மாணவர்களின் நலனுக்காக போராடிய மாணவர்கள், டாக்டர் அம் பேத்கர் பயிற்சி மையத்தின் பணிக்கு  சென்ற மாணவர்கள் ஆகியோர் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட தலைவர் மனோகரன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதா ஆகியோர் உரையாற்றினர்.

இதில், சொந்த வீட்டுமனை இல் லாமல் ஏழை,எளிய தலித் மக்கள் பரி தவித்து வருகின்றனர்.இந்நிலை யில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பஞ் சமி நிலங்கள் தலித் மக்களின் பயன் பாட்டில் இல்லாமல், பலர் ஆக்கிர மித்து அனுபவித்துக் கொண்டிருக் கின்றனர். இத்தகைய பஞ்சமி நிலங் களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான போராட் டத்தை தீவிரத்தோடு முன்னெடுக்க வேண்டும். இதேபோன்று கோவை மாநகரின் மையப்பகுதியில் சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட வேண்டும்  இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட தலைவராக யு.கே.சிவஞா னம், செயலாளராக வழக்கறிஞர் இரா.ஆறுச்சாமி, பொருளாளராக மகேஷ்வரன் உள்ளிட்ட 31 பேர்  கொண்ட மாவட்டக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் செல்லக்கண்ணு உரை யாற்றினார். முன்னதாக கேரளா முன்னாள் கல்வி அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட் சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.பேபி “எல் லோருக்குமான இந்தியா” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். முடிவில், வாலிபர் சங்க மாவட்ட  செயலாளர் அர்ஜூன் நன்றி கூறினார். இம்மாநாட்டில் ஏராளமானோர் பங் கேற்றனர்.