உதகை, ஜூன் 30- கூடலூரில் கடத்தப்பட்ட மற்றும் இயற்கையான முறை யில் உயிரிழந்த வனவிலங்கு களின் உடற்பாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 60 சதவிகிதம் வனப் பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, மான், புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்கு கள் வசித்து வருகின்றன. கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற் காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்ப வங்கள் அதிகமாக நடைபெற்றது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும், வேட்டை டையாடப்பட்ட வனவிலங்குகளின் உடற் பாகங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு பெறும் வரை, அதன் உடற்பாகங்களை பாது காத்து வருகின்றனர். இதேபோல் இயற்கை யான முறையில் வனவிலங்குகள் உயிரிழக் கும் நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பின் அதன் உறுப்புகளை வனத்துறையினர் சேக ரித்து வைத்திருந்தனர். இந்நிலையில், நீதி மன்ற உத்தரவின்பேரில், கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சரவணன், வனச்சர கர்கள் முன்னிலையில் ஓவேலி வனச்சரக பகுதியில் வேட்டையாடப்பட்ட வனவிலங்கு களின் எலும்புகள், முக்கிய உடற்பாகங்கள் எரிக்கும் பணி கூடலூர் மாக்கமூலாவில் உள்ள வன அலுவலர் அலுவலக வளாகத் தில் நடைபெற்றது. இதில், பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட் டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர் கள் அடுக்கி வைத்தனர். பின்னர் ஆவணங் களின் அடிப்படையில் உடற்பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறுகையில், வழக்குகளின் அடிப் படையில் நீதிமன்ற அனுமதி பெற்று 500 கிராம் வனவிலங்கு இறைச்சி, 30 கிலோ காட்டெ ருமை எலும்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள் ளது, என்றார்.