districts

img

சூலூரில் ரூ. 4.82 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகள்

கோவை, பிப்.16- சூலூர் பேரூராட்சியில் ரூ.4.82 கோடி  மதிப்பீட்டிலான நலத் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் பேரூராட்சியில் வெள்ளி யன்று திருச்சி சாலை பழைய பேருந்து நிலையம் பகுதி யில் ரூ.3.9 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், மூன்றாவது வார்டு  கருப்ப போயம் வீதியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை மறுசீ ரமைப்பு செய்தல். ராமசாமி ஐயர் வீதியில் மழை நீர் வடிகால் புணரமைப்பு அமைப்பு பணி உள்ளிட்டு சூலூர் பேரூ ராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.4.82 கோடி  மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தலைமை தாங்கினார். சூலூர் பேரூராட்சி செயல்  அலுவலர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். கோவை மாவட்டப் பேரூராட்சிகள் இணை இயக்குனர் துவாரக நாத் சிங், கோவை தெற்கு மாவட்ட திமுக செய லாளர் தளபதி முருகேசன் சூலூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் மன்னவன் உள்ளிட்டோர் விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தனர்.