தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் வட்டம், பெரியாம்பட்டி காம ராஜ் நகரில் கனிக்கர், தொட்டி நாய்க்கியர், எருதுகாரர், உரும் பேரி தேவர் ஆகிய சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் இந்த சமூக மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். இதன்பின், பெரியாம் பட்டி காமராஜ் நகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் மானிய நிலங்களில் குடிசை போட்டும், சிலர் வீடுகள் கட்டியும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் கனிக்கர் சமூகத்தி னர், இரவு நேரங்களில் குடுகு டுப்பை வைத்து கொண்டு வீடு, வீடாக சென்று குறிசொல்லி வாழ்க் கையை நடத்தி வருகின்றனர். தொட்டி நாய்க்கியர் சமூக மக் கள் கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் கிளிஜோசியம் பார்த்து வருகின்றனர். எருதுக்கா ரர் சமூகத்தினர் பாரம்பரியமாக பூம்பூம் மாடு என்னும் அலங்கரிக் கப்பட்ட மாட்டைக் கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறி சொல்லி வேடிக்கைக் காட்டி வாழ் கின்றனர். உரும்பேரி சமூகத்தை சேர்ந்தவர்கள் உரிமியடித்தும், சாட்டையை தன் மீது அடித்துக் கொண்டு கடை வீதிகளில் யாச கம் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கல்வி அறிவே எட்டாமல் இருந்த இச்சமூகத்தி னரின் குழந்தைகள்,
இந்த தலை முறையில் தான் பள்ளிக்கு அடி எடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் வசிக் கும் பகுதிக்கு அடிப்படை வசதி கள் முறையாக செய்து தரப்பட வில்லை. குறிப்பாக இவர்கள் கோவில் மானிய நிலத்தில் இருப்ப தால் குடியிருப்புக்கு பட்டா இல்லை. இதனால் தற்போது கட் டிய வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் மாண வர்கள் இரவு நேரங்களில் மண் ணெ்ண்ணெய் விளக்கு வெளிச் சத்தில் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஒரே குடிசையில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வரும் நிலையில், மழை வந்தால் குடிசை வீடு ஒழுக ஆரம் பித்து தண்ணீர் வீட்டிற்குள் வரு கிறது. குடிப்பதற்கு ஒகேனக்கல் தண்ணீரும் வருவதில்லை. ஒனேக்கல் நீர் சேமிப்பதற்காக கட் டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. சாக்கடை கால் வாய், சரியான சிமென்ட் சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட வில்லை. “நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது” என்று ஊருக்கே குறிச்சொல்லும் இம்மக்களுக்கு நல்ல காலமே பொறக்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது. எனவே, இவர்களுக்கு தேவையான அத்தி யாவசிய அடிப்படை தேவை களை அரசு பூர்த்தி செய்ய வேண் டும் என்பதே இம்மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
ஜி.லெனின் தருமபுரி