ஈரோடு, ஏப்.21- தாளவாடி வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய யானைக்கு வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட் டது. தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை வனப்பகுதியில், உடல்நலம் குன்றிய நிலையில் யானை கிடப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவு றுத்தலின்படி, தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ், சத்தி யமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதா சிவம், வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த னர். அப்போது கால்நடை மருத்துவர் சதாசிவம் யானையை பரிசோதித்து பார்த்தார். அது பெண் யானை. அந்த யானைக்கு 4 வயது இருக்கும் என தெரிவித்தார். மேலும், அந்த யானை குடல் புழு நோயால் அவதிப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கால்நடை டாக்டர் யானைக்கு சிகிச்சை அளித்தார். சுமார் 3 மணி நேர சிகிச்சைக்குப்பின் யானை சற்று உடல்நலம் தேறியது. இதனால், மெல்ல எழ முயற்சித்தது. அப்போது வனத்துறை ஊழியர்கள் யானையை கயிறு கட்டி இழுத்து எழுந்து நடக்கும்படி செய்தனர். தட்டுத்தடுமாறி எழுந்த யானை மெல்ல நடந்து வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து அந்த யானையை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.