districts

“மாணவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல” பத்திரத்தில் எழுதி வாங்கும் ஜிஆர்டி பள்ளிக்கு கண்டனம்

கோவை காந்திபார்க் பொன்னையராஜபுரம் சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (35). இவருடைய மனைவி ஷில்பாதேவி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோவை கொடிசியா  சாலையில் உள்ள தனியார் ராக்ஸ் பள்ளியில் மகன் 5 ஆம் வகுப்பும், மகள் 3 ஆம்  வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி மதியம் 1 மணி யளவில் பள்ளியின் மைதானத்தில் ஹேமந்த்குமாரின் 3 ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்பட மாணவிகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது கால்பந்து மைதா னத்தின் கோல் கம்பம் சரிந்து ஹேமந்த்குமாரின் மகள் மீது விழுந்தது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து மாணவியின் தந்தை ஹேமந்த்குமார் அளித்த புகாரின் பேரில் பீள மேடு போலீசார் பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஸ்வேதா, முதல்வர் ருடால்ப், ஆசி ரியை அமரீஸ்வரி, உடற்கல்வி பயிற்றுனர்கள் சீனிவாசன், பரத் ஆகிய 5 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பள்ளியில் விளையாடியபோது சிறுமி மீது கால்பந்து கோல் கம் பம் விழுந்ததில் சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது அந்த சிறுமி யின் உடல் நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வரு கின்றனர், என்றனர்.

கோவை, ஜூலை 26- “மாணவர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று மாணவர்களிடம் தனி யார் பள்ளி ஒன்று பத்திரம் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங் கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் ஜிஆர்டி எனும் தனியார் பள்ளி செயல்பட்டு  வருகிறது. இப்பள்ளியில் சமீபத்தில் மாண வர்களிடம் பத்திரம் ஒன்று வழங்கப்பட்டு வரு கிறது. அதில், “மாணவர்களின் பாதுகாப் பிற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று மாண வர்களின் பெற்றோர்களிடம் கட்டாயப்ப டுத்தி கையெழுத்து வாங்கி வருகிறது. இந்த  நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து இந்திய மாணவர் சங்க கோவை மாவட்டக்குழு விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, பொதுவாகவே பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாது காப்பை உறுதிப்படுத்துவது அந்தந்த  பள்ளி  நிர்வாகத்தின் கடமை ஆகும்.

ஆனால், அதற்கு மாறாக ஜிஆர்டி பப்ளிக் பள்ளி செயல் பட்டு வருகிறது. இது இழப்பீடு பத்திரமா? இல்லை  மாணவர்களின் உரிமையை பறிக் கும் பத்திரமா? என்ற சந்தேகம் எழுந்துள் ளது. அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப் பிற்கு நாங்கள் எந்த ஒரு பொறுப்பும் ஏற்க மாட் டோம் என்றுக்கூறி பத்திரம் ஒன்றில் மாண வர்களின் பெற்றோர்களிடம் வலுக்கட்டாய மாக கையெழுத்து வாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய போக்கை இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வன்மையாக கண்டிக் கிறது. ஆகவே, உடனடியாக பள்ளி நிர்வா கம் பெற்றோர்களிடம் பத்திரத்தில் கையெ ழுத்து வாங்குவதை கைவிட்டு மாணவர்க ளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், கோவை மாவட்ட நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படும் இப்பள்ளியின் மீது தகுந்த  நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளது.  கோவை மாவட்டத்தில் சில தனியார் பள் ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பா விதம் நேரிட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என்று கூறி பெற்றோர்களி டம் கையொப்பம் வாங்குவதாக வெளியாகி யிருக்கும் தகவல் குறித்து முதன்மைக் கல்வி  அலுவலர் கூறுகையில், இது தொடர்பான அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்ப இருப் பதாகத் தெரிவித்தார்.