திருப்பூர், ஆக.25- திருப்பூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கழிவறை யில் மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு மணிக்கட்டு, தோள்பட்டை எலும்புகள் முறிவு ஏற்பட்டதுடன், வலது காது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள இவரது குடும்பத்தினர் மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் ராஜ், ஜெனிபர் தம்பதியினர் தங்கள் இரு மகள்களுடன் செரங்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது இரு மகள் களும் செரங்காடு மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். மூத்த மகள் ஜோஸ்லின் ஜெனியா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 5ஆம் தேதி பள்ளிக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிவறைக்கு சென்றிருக்கிறார். அங்கு மேற்கூரையில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக ஜெனியாவின் கை பட்டுவிட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் ஜோஸ்லின் ஜெனியாவின் வலது கை மணிக்கட்டு, தோள்பட்டை மற்றும் காது பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் காது சரியாகக் கேட்காததால், அவரின் பெற்றோர் அங்கிருந்து மாற்றி, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜெனியாவின் காது 90 சதவீதம் கேட்கும் திறன் இழந்து விட்டதாக கூறியதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாகவும் பெற்றோர் கூறினர். சாதாரண தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியாவுக்கு இதுவரை ரூ.40 ஆயிரத்துக்கு மேல் மருத்துவ சிகிச்சைக்கு செலவளித்து விட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். அரசுப்பள்ளியில் முறையான பராமரிப்பு இல்லாமல், அஜாக்கிரதை யாக இருந்ததால்தான் தங்கள் மக ளுக்கு மின்சாரம் தாக்கி இந்த அள வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்கு பள்ளி, அரசு நிர்வாகம் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெனியாவின் தாயார் கண்ணீர் மல்க கூறினார்.